ஒரே நாளில் இத்தனை கோடி டெபாசிட்டா? அசத்திய வங்கி

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்...

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததோடு, டிசம்பர் 30-ம் தேதி வரை அந்த ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார். இதனால், பொதுமக்கள் வங்கிகளுக்கு பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். நேற்று முதல் பொதுமக்கள் பணத்தை மாற்றியும், தங்கள் கணக்கில் செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமையில் பெண்கள், முதியவர்கள் பணம் எடுக்க, செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About