முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பிரச்னை!

சிவகார்த்திகேயன் மேடையில் அழுத பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவருக்கும் படம...

சிவகார்த்திகேயன் மேடையில் அழுத பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவருக்கும் படம்  நடித்து தர ஒப்புக்கொண்டதை அடுத்து தன்னை சிலர் மிரட்டுவதாக தெரிவித்த  பிரச்சனைக்கு   சுமூக முடிவு எடுக்கபட்டு உள்ளது.

ரெமோ' வெற்றி விழாவில் தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் நெருக்கடி கொடுப்பதாகவும் நான் யாரை சொல்கிறேன் என அவர்களுக்குத் தெரியும் என மேடையில் பொங்கினார் சிவகார்த்திகேயன். இதைத்  தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த புகாரில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தவிர எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய இருவரும் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு படங்கள் எதுவும் நடித்து கொடுக்க முடியாது என்று இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஞானவேல் ராஜாவுடனான ஒப்பந்தத்தை சிவாவே ஒப்புக்கொண்டு இருந்தார் ஆனால் சிவா தற்போது உள்ள மார்க்கெட் சம்பளத்தைக் கேட்பதால் அதைத்  தர, அந்த நிறுவனம் தயங்குவதாகக் கூறப்பட்டது.  மேலும்  எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், சிவகார்த்திகேயனுக்கு நான் அட்வான்ஸ் கொடுத்தது உண்மை.என்று கூறி இருந்தார்.

 அது சிவாவோட மனசாட்சிக்குத் தெரியும். நான் பணம் பத்தி பேச ஆரம்பிச்ச காலத்துல இருந்தே என் போனை அவர் எடுக்குறது இல்லை.நான் அவரிடம் பேசியே பல மாதங்கள் ஆகுது. அப்படி இருக்கும்போது எப்படி மிரட்ட முடியும். அவர் படங்களிலே ரொம்ப ஸ்மூத்தா ரிலீஸ் ஆனது 'ரெமோ' தான். அப்புறம் ஏன் மேடையில அழுது எங்களை வில்லன் மாதிரி சித்தரிக்கணும்?  நடக்காத ஒன்ன சொல்லும்போது கஷ்டமா இருக்கு..

எங்கள்  உறவை பிரிக்கணுமின்னு  திட்டமிட்டு சிலர் சிவாவை அவங்க கட்டுப்பாட்டுல வச்சு இருக்காங்க. அதுல இருந்து அவர் வெளில வரணும். அவர் என்கிட்ட நேருக்கு நேர பணம் வாங்கலைன்னு இதுவரை சொல்லல. அப்படி சொல்லவும் மாட்டாருன்னு நினைக்குறேன்” என இந்த விவகாரம் குறித்து சொல்லி  இருந்தார்

. இந்த பிரச்னை குறித்து அனைத்து தரப்பினரும் அழைத்து நேரில் பேசித்தான் முடிவு எடுக்க முடியும். கடந்த வாரமே நேரில் வருவதாகக்  கூறினார். ஆனால் வேலை இருப்பதால் வரமுடியவில்லை. ரெமோ ரிலீஸுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக்  கொள்ளலாம் என கூறினார் சிவகார்த்திகேயன். கடந்த மாதம்  24-ம்  தேதி அனைத்து தரப்பினரையும் நேரில் வரச் சொல்லி இருந்தோம் அப்போதும்  அவ்ர் வரவில்லை இந்த வாரத்தில் பிரச்னைக்கு ஒரு  முடிவு கிடைத்து விடும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் கூறப்பட்டு  வந்தது

இந்த நிலையில் இந்த  பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் .தயாரிப்பாளர்  சங்க நிர்வாகிகள் ,ஞானவேல் ராஜா ,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் பிரச்னை முடிந்து  விட்டதாக கூறப்படுகிறது

. ஞானவேல் ராஜா,மதன் இருவருக்கும் படங்கள் நடித்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒத்துக் கொண்டதாகவும் வேந்தர்  மூவிஸ் மதனுக்கு  கால்ஷீட் கொடுப்பது பற்றி அவர் நேரில் வந்து கேட்டால் பேசிக்கொள்ளலாம் என்று கூட்டத்தில்  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்த போது   மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு  இன்று துவங்க  இருந்தது. இந்த   நிலையில  தான் இன்று பேச்சு வார்த்தை நடைபெற்று  உள்ளது. தயாரிப்பாளர்  சங்க நிர்வாகிகள் ,பெப்சி யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

.சிவாவை   இந்த விவகாரத்தில் முடிவு எடுத்தால் தான் மோகன் ராஜா படம் ஷூட்டிங் நடக்கும் அப்படின்னு  மறைமுகமா சொல்லி  இருக்காங்க. அப்படி தான்  இந்த கூட்டத்தை   எடுத்துக்கணும் ஏற்கனவே எடுத்து  வைக்கபட்ட முடிவ  நோக்கி  சிவாவை தள்ளி  இருக்காங்க அப்படின்னு சொல்லலாம்.

அதனால  தான் அவரால  எதுவும்  பேச முடியல  இப்போதைக்கு  இந்த பிரச்சனையில் இருந்து வெளிய  வந்தா  போதும்ன்னு  நெனச்சு  இருக்கலாம்.மேலும் சிவா கேட்ட  சம்பளத்தை தர இரண்டு தயாரிப்பாளர்களும் ஒத்துக்கொண்டதால  சிவாவும் அவங்க  சொன்னதுக்கு எல்லாம் சரின்னு சொல்லிட்டாரு.

இந்த  பிரச்னை உடனடியாக முடிவுக்கு  வந்திருச்சு .இந்த  பிரச்னையில் கருத்து  கூறிய பல  நடிகர்கள் இன்று இந்த கூட்டத்துக்கு யாருமே  வரலை. நடிகர்  சங்க நிர்வாகிகளாவது சிவாவுக்கு துணையா வந்து  இருக்கலாம் எல்லாரும் சிவா பிரச்னையை வச்சு அவங்க குளிர் காஞ்சுகிட்டது தான்  மிச்சம் என  சோகமாக  சொல்லி முடித்தார்

 வணிகமே உறவுகளை தீர்மானிக்கும் துறையில் எல்லா சண்டைகளும், பணத்திலேயே   சரிக்கட்டப்படும் என்பது மீண்டும்  ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கு

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About