'ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது': துரைமுருகன் ஓப்பன் டாக்!

'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் கிழக்கு மாவட்ட ...

'சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது' என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், முத்துக்கடையில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.  அதில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அந்தக் கூட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா குறித்து துரைமுருகன் பேசினார்.

துரைமுருகன் பேசும் போது, "கருணாநிதி நலமுடன் உள்ளார். நாள்தோறும் பத்திரிகைகளைப் படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார். யாரைப் பிடிக்கும் என்ற மருத்துவரின் கேள்விக்கு, 'அண்ணாவைப் பிடிக்கும்' எனக் கூறுகிறார் கருணாநிதி. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமலிருப்பது சோகமாக உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்டுப்பாடு, அ.தி.மு.க-வில் தற்போது இல்லை" என்றார்.

இதனிடையே, "ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?. அரசு செய்யும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம்" என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About