வெளியேறிய கஞ்சா கருப்பு, சோகத்தில் பரணி! அப்படி என்ன நடந்தது?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்....

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

கஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்த உடனே அவர் எழுந்து மற்ற போட்டியாளர்களை கட்டிதழுவி பிரியா விடை கொடுத்தார். ஆனால் அங்கேயே நின்றுகொண்டிருந்த பரணியை கண்டுகொள்ளவே இல்லை.

அனைவருக்கும் சொல்லிவிட்டு தன்னிடம் வந்து பேசுவார் என எதிரிலேயே காத்திருந்த நடிகர் பரணிக்கு அது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவர் கண்கலங்கிய நிலையில் மிகவும் சோகமாக காணப்பட்டார்.

கடைசியாக ஓவியாவுடன் ஒரு குத்தாட்டம் போட்ட கஞ்சா கருப்பு அனைவருடனும் ஒரு செல்பி எடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.

மற்ற போட்டியாளர்கள் சிலரும் கண்கலங்கியது நிகழ்ச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About