அனைவருமே Fake தான் உளறிய ஆர்த்தி மீது கொந்தளித்த காயத்ரி - சண்டை மூண்டது

தமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் மற்றவரை குறை கூறி...

தமிழக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பேச வைத்து விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் யாராவது ஒருவர் மற்றவரை குறை கூறிக்கொண்டே தான் இருக்கின்றனர். இதில் பலரின் இன்னொரு முகம் வெளிப்பட்டு வருகிறது.

ஆர்த்தி முதல் நாளிலிருந்து அனைவரையும் வம்பிழுத்து வருகிறார். இதில் பெரும்பாலும் ஜுலியைத் தான் போலி, போலி என்று கூறி அழ வைத்து வந்தார். இதற்கு காயத்ரி சப்போர்ட் செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஆர்த்தி பேசும்போது, அனைவருமே தங்கள் உண்மையான குணாதிசயத்தை மறைத்து போலியாக நடிக்கிறார்கள். நானும் இவர்களை போல் போலியாக மாறிவிடுவேனோ என்று பயமாக உள்ளது என்றார்.

மக்கள் ஓட்டளித்தால் நான் நானாக இருப்பேன் இல்லையென்றால் போலியான ஆர்த்தியாகத்தான் வெளியேறுவேன் என்று கூறினார்.

இதனால் காயத்ரி, சினேகன் உட்பட மற்ற பங்கேற்பாளர்கள், ஓட்டு வாங்குவதற்காக மற்றவர்களை போலியாக நடிக்கிறார்கள் என ஆர்த்தி கூறுகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About