சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !

ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என...

ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என்ற தலைப்பை கொண்ட படத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

இதே போல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இன்னொரு போஸ்டரில், தமிழ் திரையுலம் மூலம் தமிழ் நாட்டின் முதலமைச்சரான நபர்களின் பெயரை குறிப்பிட்டு, அந்த வரிசையில் இப்பட தலைப்பான ’12-12-1950′ யையும் குறிப்பிடப்பட்டது. இந்த போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெற தேவைப்படும் சர்ச்சைகள் ’12-12-1950′ படத்திற்கு நிறையவே கிடைத்துவருகிறது எனக்கூறலாம்.

” படத்தின் மைய்யக்கருத்தை மக்களிடம் கொண்டு பொய் சேர்க்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ‘பரோல்’ என்பது இப்பட கதையின் முக்கிய பங்காகும். ‘பரோல்’ என்ற விஷயம் நமது ஊரில் மிகவும் பேசப்படும் ஒரு தலைப்பாக தற்பொழுது மாறியுள்ளதால்தான் இந்த சர்ச்சையே. இது தற்செயலாக நடந்துள்ள விஷயமே தவிர திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் அல்ல. இப்படத்தை வெளியிடுவதற்கு விநியோகத்தார்கள்ளிடையே இருக்கும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகனும் ரசித்து கொண்டாடப்படும் படம் தான் ’12-12-1950′ ” என்றார் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் யாகூப் அலி.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About