­
01/21/17 - !...Payanam...!

பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண...

பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண்புள்ள மனிதர்களால் தீர்மானிக்கப் படுகிறது; அங்கே உதிரும் ஆழமான சொற்களால் கட்டமைக்கப்படுகிறது; அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் அன்பின் ஒளியால் அலங்கரிக்கப்படுகிறது. அத்தகைய பிரமாண்டம் பூசியிருந்தது, `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016' மேடை! தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர்கள் அலங்கரித்த விழாவை, தங்களுடைய வருகையால் மேலும் அழகாக்கினர் மூன்று கலைஞர்கள். நெருப்பாக வந்து நின்றார் ரஜினி... கனிவும் நிறைவுமாக நின்றார் கமல்ஹாசன்... நெகிழ்ந்துபோய் நின்றார் விஜய். `இன்னும் சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி அரங்கத்துக்கு வரப்போகிறார்!' என, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே பாலாஜி அறிவிக்க, பேரைக் கேட்டதற்கே அரங்கம் அதிர்ந்தது. `நெருப்புடா... நெருங்குடா பாப்போம்...' என்ற `கபாலி' பாடல், விழா அரங்கையே பரபரப்பாக்கியது. வாடிவாசலில் காத்திருக்கும் மாடுபிடி வீரர்களைப்போல அத்தனை பேரும் `பாட்ஷா'வின் வரவுக்காகக் காத்திருந்தனர்....

Read More

Search This Blog

Blog Archive

About