April 29, 2018
'சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ - கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்
April 29, 2018<
'நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி தாய்.சிவகிருபாகரன்இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம்பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் என்ற மாணவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், இன்று தான் சொன்னது போலவே ஐஏஎஸ் ஆகி தன் குடும்பத்திற்கும், அந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் குடும்பத்தில் தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள் என அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள்....