May 27, 2019
சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்!
May 27, 2019<
சென்னையில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவே உள்ளது. எங்க வீட்டுல தண்ணி இல்லை, உங்க வீட்டு நிலவரம் என்ன என்று கவலையுடன் சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர்.பணத்தை தண்ணீராக செலவழிக்காதே என்பார்கள் பெரியவர்கள். ஆனால் இன்று தண்ணீரை பணம் போல பார்த்து பார்த்து செலவழிக்கும் பரிதாப நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் அந்த அளவுக்கு தலைநகரை தண்ணீர்ப் பஞ்சம் தெறிக்க விட்டு வருகிறது.நிலைமை இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறி விடும். அந்த அளவுக்கு அதல பாதாளத்திற்குப் போய் விட்டது நிலத்தடி நீர். தண்ணீர் இல்லை என்ற குரல்கள் கூக்குரல்களாக மாறி வருகின்றன.தறி கெட்ட வளர்ச்சிசென்னை நகரின் தறி கெட்ட வளர்ச்சியும், அந்த வளர்ச்சிக்கேற்ப திட்டங்கள் தீட்டப்படாததுமே இந்த தண்ணீர்ப் பஞ்சத்திற்கு முக்கியக் காரணம். நகரம் இத்தனை வேகமாக வளர்கிறதே, அதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையிலான திட்டங்களைத்...