November 05, 2016
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள் வேகவைக்கப்படுகின்றன. இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளதாக உணவு விடுதியின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். துணிகளைப் பயன்படுத்தினால் இட்லிகளைப் பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது என்கிற காரணத்தையும் உணவு விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இட்லி வேகவைக்கும் தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவை இட்டு வேகவைத்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி பரிசோதித்த ஒருவர், புற்று நோயை உருவாக்கக் கூடிய பாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. ...
November 05, 2016
விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்! அதிர்ச்சியளிக்கும் பள்ளி நிபந்தனை
November 05, 2016விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை.... மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை.... - பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்...
<
விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை.... மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை.... - பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைகள்! ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனையோ, அவளது மாதவிலக்கு தேதிகளோ உதவாது. ஆனாலும் இந்த இரண்டும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், இப்படியொரு வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடியின விடுதிப் பள்ளிகளை 'ஆஷ்ரம்ஷாலா' என அழைக்கிறார்கள். ஆஷ்ரம்ஷாலாக்களில் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள்...அவற்றின் பின்னணியில் பாலியல் வன்கொடுமைதான் காரணமாக இருக்கும் என்கிற யூகத்தைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டி. ஆஷ்ரம்ஷாலாக்களில் இதுவரை நடந்துள்ள 1077 மரணங்களில், 31 தற்கொலைகள். 67 சதவிகித மரணங்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் பள்ளி மாணவிகளிடம்...
November 05, 2016
நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா
November 05, 2016சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூல...
சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர், சமூக நீதிக்காக போராடுபவர், நூல் ஆசிரியர், விஞ்ஞானி என பல்வேறு துறைகளிலும் பெயர் எடுத்தவர் வந்தனா சிவா.நமது மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும், பறிபோன காப்புரி மையை மீட்பதற்கும் போராடி வருபவர். ரசாயன கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். அரிய பயிர்களின் விதைகளை காப்பதற்காக, “நவதான்யா’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். பனி சிகரங்கள் உருகி கரைவது குறித்தும், சில தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து போவது குறித்தும் இவைகளை காப்பது குறித்து சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.இது குறித்து நூற்றுக் கணக்கான கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். தண்ணீர், தனியார் மையம், சுற்றுச் சூழல் என்ற தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டு மனம் வெதும்பி இவர் எழுதிய, “வாட்டர் வார்’ என்ற நூல் பிரபலமானது.டேராடூனில் சுரங்கங்கள் குறித்து அறிக்கை...
November 05, 2016
குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ! அந்த நாட்கள்'
November 05, 2016ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்...
ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். 1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு. முழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். தற்போது இப்படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...
November 05, 2016
கௌதமியை போல மற்றொரு நடிகை Living Together வாழ்க்கைக்கு டாடா
November 05, 2016தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான். இந்நிலையில் கௌதமியை போல Liv...
<
தமிழ் சினிமாவில் அண்மை காலமாக ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கமல், கௌதமி விவாகரத்து விஷயம் தான். இந்நிலையில் கௌதமியை போல Living Together வாழ்க்கையில் இருந்த நடிகை சீதா விலக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. சீதா, நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின் டிவி நடிகர் சதீஷ் என்பவருடன் Living Together வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஏனெனில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் சீதா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ...
November 05, 2016
ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்?
November 05, 2016கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்...
<
கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறையும் ரெடியானது. எந்த நேரத்திலும் இந்த அறைக்கு ஜெயலலிதா வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அன்று காலை, மாலை, இரவு... என்று வெவ்வேறு நேரம் சொல்லப்பட்டது. ஆனால், வார்டு மாற்றப்படவில்லை. அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். டாக்டர்கள் கிளியரன்ஸ் தரவில்லை என்று தெரிந்தது. இதற்கு பின்னணி காரணம்? ஜெயலலிதாவுக்கு கழுத்தில் (tracheostomy) மூச்சுக்குழாய் அப்படியே இருக்கிறது. அதேபோல், செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட 'வென்டிலேட்டர்' சில நிமிடங்கள் எடுத்து, இயற்கையாக ஜெயலலிதாவால் சுவாசிக்க முடிகிறதா? என்று செக் செய்தார்கள். ஆனால், அதுவும் சரிபட்டு வரவில்லை. இப்படியிருக்க.. ஜெயலலிதாவின் உடல்நிலை நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி என்ன என்று விசாரித்தோம்! மருத்துவமனை வட்டாரத்தில் 'Hypoxia' என்கிற மெடிக்கல் வார்த்தையை உச்சரிக்கிறார்கள். அது என்ன? அதுபற்றி...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
November
(109)
-
▼
Nov 05
(6)
- பாலித்தீன் பேப்பர் பயன்படுத்தி வேகவைக்கப்படும் இட்...
- விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்! அதி...
- நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வ...
- குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ! அந்த ...
- கௌதமியை போல மற்றொரு நடிகை Living Together வாழ்க்கை...
- ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்?
-
▼
Nov 05
(6)
-
▼
November
(109)