­
06/15/17 - !...Payanam...!

"நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார...

"நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார் டான் ராலிங்க்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர். மண்வெட்டியில் தொடங்கி, மரம் அறுக்கும் ரம்பம், கார்கள், வேன்கள் வரை தகரங்களில், இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்கிறார். அப்படி சமீபத்தில், "நேச்சர் டெலிவர்ஸ்" ( Nature Delivers ) என்ற பெயரில் ஒரு பழைய ஃபோர்ட் - ட்ரான்ஸிட் ( Ford - Transit ) வேனில் சில மர வடிவங்களைக் கைகளாலேயே செதுக்கினார். "பொதுவாக மோட்டார் வாகனங்களை நவீனத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாற்றாகவும் பார்க்கிறோம். ஆனால், இவை இயற்கையிடமிருந்து நம்மை முற்றிலும் விலக்குகிறது. இவைகளைக் கொண்டு இயற்கையை நாம் கடந்திட முடியாது" என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் இதை வடிவமைத்துள்ளார். வெளிநாடுகளில் ஃபோர்ட் ட்ரான்ஸிட் வாகனம், பொருள்களை டெலிவர் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வாழ்வின் முக்கிய அடையாளமாக அது இருப்பதால், அந்த...

Read More

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந் தேயாம...

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந் தேயாமதி முகத்தாய் செப்பு' துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும். காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும்  என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது. துத்தி நம்முடைய முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். அதைப் போன்ற சிறப்புவாய்ந்த கீரை வகைகளை நாம் அதிகம் கண்டுகொள்வதே இல்லை. எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளர்ந்து, எண்ணற்ற Dr.செந்தில் கருணாகரன் சித்த மருத்துவர்நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ அதன் சிறப்புகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்... 'துத்திக் கீரை' பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி. இதற்கு 'அதிபலா' என்ற...

Read More

பூமியைத் தவிர இந்த அகண்ட பால்வீதியில் பல கிரகங்கள் இருப்பதாகவே அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், பூமியில் மனிதன் வாழ்வதுபோல், வேறு ஏதாவ...

<
பூமியைத் தவிர இந்த அகண்ட பால்வீதியில் பல கிரகங்கள் இருப்பதாகவே அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், பூமியில் மனிதன் வாழ்வதுபோல், வேறு ஏதாவது ஒரு கிரகத்தில், உயிரினங்கள் ஏதும் வாழ்கிறதா என்ற சந்தேகம் இல்லாதவர்களே இந்தப் பூமியில் இருக்க முடியாது. உண்மையில் ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து போவதாகக் கூறப்படுவது உண்மையா? ஏலியன்ஸ் மனித அறிவியல் தொழில்நுட்பங்களை எல்லாம் அசைத்துப் பார்த்த இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவுள்ளது. ஆம், இத்தனை காலம் கேள்விக்குறியுடனே இருந்துவந்த வேற்றுகிரகவாசிகள் குறித்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிக்கத் தயாராகி வருகிறது நாசா. நாசாவின் அறிவிப்பு குறித்து அறிந்துகொள்வதற்கு முன்னர், நம்மில் உலவிவந்த ஏலியன்ஸ் குறித்த கதைகளையும், நிரூபணங்கள் எனக் கூறப்பட்டவைகள் குறித்தும் காணலாம். பழங்கால ஆய்வுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து எகிப்து பகுதிகளில் ஏலியன்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எகிப்திலுள்ள பிரமிடுகள் ஏலியன்களால் அமைக்கப்பட்டவை...

Read More

Search This Blog

Blog Archive

About