­
11/22/16 - !...Payanam...!

நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது.  ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அ...

நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது.  ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வெளியூரில் நடந்த படப்பிடிப்புகள், சென்னையில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின்  படப்பிடிப்பும், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் 'ஓடி ஓடி உழைக்கணும்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் மட்டுமே நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் 'பைரவா' படமும், சூர்யாவின் 'சிங்கம் -3' படங்களின்  போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.                                                    இந்திய, தமிழ் சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் தனது சம்பளத்தில் பாதிப் பணத்தை...

Read More

’ராஜா சார் வந்து என்னை இந்தப் பாட்டைப் பாடச்சொல்லும்போது பயமா இருந்தது. ரொம்ப பெரியவங்கள்லாம் பாடிட்டு இருக்காங்க., சரி.. ‘சின்னக் கண்ணன் த...

<
’ராஜா சார் வந்து என்னை இந்தப் பாட்டைப் பாடச்சொல்லும்போது பயமா இருந்தது. ரொம்ப பெரியவங்கள்லாம் பாடிட்டு இருக்காங்க., சரி.. ‘சின்னக் கண்ணன் தானே.. பாடலாம்’னு பாடறேன்’ - பாலமுரளி கிருஷ்ணா இவ்வாறு சொன்னது 2011ல் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியின்போது. அப்போது பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் வயது 81. அவர் பாடிய பாடல் கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல். அந்தப் பாடலை அவர் ஒலிப்பதிவில் பாடிய ஆண்டு, 1977. அவரது 47வது வயதில் பாடி மிகப் பிரசித்தி பெற்ற அந்தப் பாடலை, 34 ஆண்டுகள் கழித்து கொஞ்சமும் பிசகாமல் பாடி கைதட்டல்களை அள்ளியிருப்பார் அவர். 6 ஜூலை 1930-ல் பிறந்தவர், தனது ஆறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர். இவரது பாடல்கள் குறித்தோ, அதன் சங்கீதத்துவம் குறித்தோ எழுதும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. ஆனால் அவரை நான் பார்த்து  வியந்த விஷயங்கள் நிறைய உண்டு. பாடகராக மட்டும்...

Read More

"பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது கறுப்புப் பண ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு ஆரம்பப் புள்ள...

<
"பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது கறுப்புப் பண ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு ஆரம்பப் புள்ளியே, அடுத்தகட்டமாக இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. கறுப்புப் பணத்துக்கு எதிராக இன்னும் அடர்ந்த நீண்ட நெடும் போருக்காக, அரசு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறது" என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர்களிடையிலான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மோடியின் இந்த நடவடிக்கையை அநியாயங்களுக்கு எதிரான அறப்போர் என அவர்கள் குறிப்பிட்டனர். கூட்டத்தினிடையே பேசிய மோடி, "கறுப்புப் பணம், கள்ள நோட்டு மற்றும் லஞ்ச ஊழல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர், இதற்குத் தீர்வு காண்பதற்காக அரசு பெரிதும் பாடுபட்டுவருகிறது. நாம் மக்களுக்காகத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறோம், நமக்குத் தெரிந்தவர்கள் உறவினர்களுக்காக அல்ல. எதிர்கட்சிக்காரர்கள் இதற்கு எதிராகக் குரல்கொடுப்பது கறுப்புப் பணத்துக்குத் துணை...

Read More

Search This Blog

Blog Archive

About