­
11/11/16 - !...Payanam...!

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-...

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா. ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம். இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம். கதைக்களம் சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல். சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது. பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது...

Read More

இஸ்ரோவின் சந்திராயன்-2  செயற்கைக்கோளின் சோதனை கர்நாடகாவின் சலக்கெரெ பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர்  ஏ.எஸ் கிரண் குமார் தெரிவித...

இஸ்ரோவின் சந்திராயன்-2  செயற்கைக்கோளின் சோதனை கர்நாடகாவின் சலக்கெரெ பகுதியில் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர்  ஏ.எஸ் கிரண் குமார் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் ஒரு நிகழ்சியில் பங்குப்பெற்ற கிரண் குமார் கூறுகையில், '' 2017-2018 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 , நிலவில் இறங்கி, அங்குள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில் தற்போது, நிலவின் நிலபரப்பில் உள்ளது போன்ற நிலக்குழிகளை ஆய்வகத்தில் உருவாக்கி, சந்திராயன் - 2 செயற்கோளின் பாகங்களை செலுத்தி பார்த்து சோதனை மேற்கொண்டு வருகிறது" என்றார்.  ...

Read More

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்...

<
நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததோடு, டிசம்பர் 30-ம் தேதி வரை அந்த ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார். இதனால், பொதுமக்கள் வங்கிகளுக்கு பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். நேற்று முதல் பொதுமக்கள் பணத்தை மாற்றியும், தங்கள் கணக்கில் செலுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமையில் பெண்கள், முதியவர்கள் பணம் எடுக்க, செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About