­
11/26/17 - !...Payanam...!

பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறக...

பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.இந்நிலையில் விஜயகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அட்மிட் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது."விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒருவாரத்துக்குள் செல்லவுள்ளார்" என தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். ...

Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில்...

<
நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ் ராஜை விமர்சித்திருந்தார்."மகன் இறந்த துக்கம் இல்லாமல், மனைவியை விட்டுவிட்டு டான்சர் பின்னால் ஓடிய நீ மோடி/யோகி யை விமர்சிக்கலாமா" என கூறியிருந்தார்.இதற்காக பிரகாஷ் ராஜ் தற்போது அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "என்னை ட்ரோல் செய்பவர்கள் சமூக வலைத்தளங்களில் முகமூடிக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருப்பவர்கள்.ஆனால் இப்போதெல்லாம் பெரிய பதவியில் இருப்பவர்களே வெளிப்படையாக ட்ரோல் செய்கின்றனர். அதனால் மன்னிப்பு கோரும்படி சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ...

Read More

சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உ...

<
சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. “எதிர்காலம் இவைதான். நிஜ கரன்ஸிகளை விட இவை பலம் வாய்ந்தவை” என்கிறார் பில் கேட்ஸ். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் மதிப்பு 7000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 4,80,000. 2016ல் இதன் மதிப்பு 60,000 மட்டும்தான். ஒரே ஆண்டில் 8 மடங்கு முன்னேற்றம்.அடிப்படையில் டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இந்தியா கூடத்தான் டிஜிட்டல் கரன்ஸிக்கு மாறிவிட்டது என நினைக்க வேண்டாம். அது நிஜ கரன்ஸியின் டிஜிட்டல் வடிவம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக...

Read More

தமிழக அரசின்  ஆவின் பால் கடல் கடந்து இன்று சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்ற...

தமிழக அரசின்  ஆவின் பால் கடல் கடந்து இன்று சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூரில் நடந்தது. இந்த முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட்டு சாதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு தளங்களிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.இது ஒருபுறமிருக்க, உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர், அதிகாலையில் எழுந்து பால் வியாபாரிகளை வழிநிறுத்தி, அவர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் பாலின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார். இவரின் பணியை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.‎புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமநாதன், இவர் தனது ஆய்வுப் பணிகளை அதிகாலையில் ஆரம்பித்துவிடுகிறார். ஆலங்குடி அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் அன்றாடம் கறக்கப்படும் கறவைப் பாலைத்தான் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.‎இதனால்,பெரிய கேன்களில் பால்பண்ணையிலிருந்து கறக்கப்படும் பாலை சேகரித்து, விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆலங்குடி பகுதியில் அதிகமாக...

Read More

Search This Blog

Blog Archive

About