­
06/07/19 - !...Payanam...!

நான் அவன் இல்லை பாணியில் தற்போது வந்துள்ளது செவன் படம். ஒரு ஆண், ஆறு பெண்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த செவன் படம். கதை: ஐடி நிறுவ...

<
நான் அவன் இல்லை பாணியில் தற்போது வந்துள்ளது செவன் படம். ஒரு ஆண், ஆறு பெண்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த செவன் படம்.கதை:ஐடி நிறுவனனத்தில் பணியாற்றிவரும் நந்திதா உடன் பணியாற்றும் ஹீரோ ஹவிஷை காதலிக்க துவங்குகிறார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். ஆனால் திடிரென ஹவிஷ் காணாமல் போகிறார். அதனால் நந்திதா போலீசில் புகார் கொடுக்கிறார்.போலீஸ் அதிகாரி ரகுமானிடம் அவர் நடந்ததை கூறுகிறார். அப்போது தான் தெரிகிறது இதுபோல வேறு சில பெண்களும் ஹவிஷ் பற்றி புகார் கூறியுள்ளனர் என்று. தலைமறைவாக இருக்கும் ஹவிஷை போலீஸ் தேடி கண்டுபிடிக்கிறது.ஆனால் தன் மீது புகார் கூறியுள்ள பெண்களை யாரென்றே தெரியாது என்கிறார் ஹவிஷ். இடையில் ஒரு கொலைப்பழியும் அவர் மீது விழுகிறது. பெண்களை ஏமாற்றியது யார்? கொலை செய்தது யார்? - கேள்விக்கு மீதிப்படம் பதில் சொல்கிறது.க்ளாப்ஸ் மற்றும் பல்ப்ஸ் :படத்தின் கதை சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தாலும்...

Read More

தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 24 ம...

<
தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு 28ம் தேதி அரசாணை வெளியிட்டது. அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது.இந்த நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது.. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும்.சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கூறுகையில், இது வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பு. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு...

Read More

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து புரட்சி செய்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. மாநிலங...

<
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து புரட்சி செய்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.மாநிலங்களில் முதல்வர் பதவிதான் பிரதானமானது. இருப்பினும் உட்கட்சி மோதல்கள், கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்காக துணை முதல்வர் பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அரசியல் சாசனப்படி முதல்வருக்குத்தான் அதிகாரம். துணை முதல்வர் என பதவி வகித்தாலும் ஒரு அமைச்சருக்கான அதிகாரங்கள்தான் அவருக்கும் உண்டு.மாநிலங்களில் துணை முதல்வர் பதவிகள் என்பது அண்மைக்காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது.குடும்ப சண்டைக்காக துணை முதல்வர் பதவிமுதல்வராக இருந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி மத்திய அமைச்சரானார். இதனால் இளையமகனும் அமைச்சர் பதவி வகித்தவருமான மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் கருணாநிதி. அதுவும் டெல்லியில் இருந்து அழகிரி சென்னை வந்து சேருவதற்குள் ஸ்டாலினை துணை முதல்வராக்கி அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார் கருணாநிதி. பின்னர் அதிமுக...

Read More

சீனாவில் ரஜினியின் 2.0 படம் ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்க...

<
சீனாவில் ரஜினியின் 2.0 படம் ரிலீசாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது.ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருந்த படம் '2.0'. கடந்தாண்டு ரிலீசான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ரூ.600 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.800 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. செல்போன் ஆபத்து, பறவைகளை காக்க வேண்டும் என பல நல்ல விசயங்களைப் பேசி இருந்தது இப்படம்.இந்நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி இப்படம் சீனாவில் ரிலீசாக இருக்கிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு போஸ்டரும் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தியேட்டர்கள் எண்ணிக்கை:அதில், சீனாவில் இப்படம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது தவறான தகவல் எனக் கூறப்படுகிறது. இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி சீனாவில்...

Read More

உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி கண்ணை நோண்டி கொலை செய்த கொடூரன்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் த...

<
உத்தர பிரதேசத்தில் 3 வயது சிறுமியை கடத்தி கண்ணை நோண்டி கொலை செய்த கொடூரன்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் 3 வயது சிறுமி ட்விங்கிள் சர்மா கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடன் பிரச்சனையால் சிறுமியை கொன்று அவரின் கண்களை தோண்டி எடுத்து உடலை குப்பை மேட்டில் போட்டுள்ளார்கள். சிறுமியின் உடலை நாய்கள் கடித்துக் குதறிய கொடூரம் நடந்துள்ளது.முதலில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.சிம்ரன்பேபி ட்விங்கிள் ஷர்மா பற்றிய செய்தி அறிந்து கவலையாக உள்ளது. ஒரு அப்பாவியிடம் இந்த அளவுக்கு கொடூரமாக நடக்க முடியுமா?. உடனே நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிம்ரன். என்ன தான்...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்...

<
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. தர்பார் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று மே 29-ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாம்.இந்நிலையில் படத்தில் நடிகர் ஸ்ரீமன் இணைந்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 19 வருடங்களுக்கு முன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் ஸ்ரீமன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். ...

Read More

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர் தான். அவரை பார்த்து நடிகராக ஆசைப்பட்டவர்கள், ஆசைப்படுபவர்கள் பலர். நடிக்க வருபவர்களும் அவர் நடித...

<
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நிகர் அவர் தான். அவரை பார்த்து நடிகராக ஆசைப்பட்டவர்கள், ஆசைப்படுபவர்கள் பலர். நடிக்க வருபவர்களும் அவர் நடித்த காட்சிகளை நடித்துக் காட்டும் வழக்கம் இன்று வரை உள்ளது.இந்நிலையில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு கவுரவம் செய்துள்ளது. பள்ளிப் பாடத்தில் சிவாஜி கணேசனை சேர்த்துள்ளது தமிழக அரசு. இதையடுத்து இயக்குநர் இமயம் பாரதிராஜா எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் 'நடிகர் திலகம்', 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலாக வெளியிட்டார்.இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல...

Read More

Search This Blog

Blog Archive

About