June 23, 2017
நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி! ரஜினியின் அண்ணன் போட்ட டூப்?
June 23, 2017<
ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை தகிடு தத்தங்களும் ரஜினிக்குள்ளும் அடைக்கலமாகிருச்சோ என்ற ஐயத்தை விளைத்த சந்திப்புதான் அது. நதிகள் இணைப்பு போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணுவை ரஜினி சந்தித்தார். அப்போது அய்யாக்கண்ணு ரஜினியிடம், “நதிகள் இணைப்புக்காக நீங்கள் தருவதாக சொன்ன ஒரு கோடியை உடனே பிரதமரிடம் கொடுக்க வேண்டும்” என்றாராம். “அதுக்கென்ன… இப்பவே வாங்கிட்டு போங்க” என்று கூறிய ரஜினி அந்த பணத்திற்கான செக்கை அய்யாக்கண்ணுவிடம் கொடுக்க முனைந்தாராம். இந்த தகவலை அய்யாக்கண்ணுவே கூறியிருக்கிறார். இவர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு வரும் டவுட் ஒன்றே ஒன்றுதான். அதை ரஜினி பேமிலிதான் கிளியர் பண்ண முடியும். 2016 ம் வருடம் ஜுன் மாதம் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது ரஜினி அமெரிக்காவிலிருந்தார். அண்ணாரிடம் பேட்டி கண்ட நிருபர்கள், “நதிகள்...