­
11/07/16 - !...Payanam...!

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை மு...

<
‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனாலும் கமலின் இளமைப்பருவம் கழிந்த ஆழ்வார்பேட்டை வீடு, அலுவலகமாக செயல்பட்டு வந்ததில் எந்த சிரமமும் இருந்ததில்லை. தினந்தோறும் இங்கு வரும் கமல், பல்வேறு நல்ல கெட்ட விஷயங்களை இங்கிருந்துதான் டீல் பண்ணியிருக்கிறார். “நான் இந்தியாவை விட்டே போறேன்” என்று அதிர்ச்சி கிளப்பியதும் இந்த பில்டிங்கில் இருந்த போதுதான். அதற்கப்புறம் மாடியிலிருந்து தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டு இன்னும் கட்டோடு நடமாட காரணமாக இருப்பதும் இந்த ஆழ்வார்பேட்டை ஆபிஸ்தான். நிற்க… இனிமேல் இந்த ஆபிசும் சரி. நீலாங்கரை பங்களாவும் சரி. கமல் பாதம் படுவதற்கு காத்துக் கிடக்க வேண்டும். அல்லது படாமலே போகக் கூட நிறைய...

Read More

தெலுங்கு ஸ்டார்களும் சரி, கேரள ஸ்டார்களும் சரி. அவ்வளவு ஏன்? கலகலத்துப் போகிற வயசில் கதாநாயகிகளை கட்டியணைக்கும் கன்னட ஸ்டார்களும் சரி. தங்க...

<
தெலுங்கு ஸ்டார்களும் சரி, கேரள ஸ்டார்களும் சரி. அவ்வளவு ஏன்? கலகலத்துப் போகிற வயசில் கதாநாயகிகளை கட்டியணைக்கும் கன்னட ஸ்டார்களும் சரி. தங்களது வாரிசுகளை எப்படி களம் இறக்கினால், நாற்காலிக்கு வலு சேர்க்க முடியும் என்பதை மிக மிக தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்சினிமாவையே ஒரு காலத்தில் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த கேப்டன் விஜயகாந்த் அந்த விஷயத்தில் பச்சை மண்ணாக இருந்துவிட்டாரே… என்று கவலைப்படுகிறவர்கள் இப்போதும் உண்டு. சண்முக பாண்டியனின் உடல் வாகுக்கும் நடிப்பு திறனுக்கும் ஏற்ப ஒரு கதையை உருவாக்கி, அந்த படத்தை வெற்றிப்படமாக்கியிருந்தால், விஜயகாந்தின் சினிமா சர்வீஸ் இன்னும் போற்றப்பட்டிருக்குமே என்பதுதான் பலரது கருத்து! இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சண்முக பாண்டியனின் இரண்டாவது படமான ‘தமிழன் என்று சொல்’ மீண்டும் தூசு தட்டப்பட்டு விட்டது. இதில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்தே நடிக்கிறார். இவர் கண்ட இடத்திலும் மூக்கை நுழைக்காமல் இயக்குனரின் சுதந்திரத்திற்கு...

Read More

வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்ட...

<
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம். சூரி சந்தானம் என்று சிலர் மட்டுமே வடிவேலுவின் இடத்தை நிரப்பி “கவலைப்படாதே ராசாங்களா… நாங்க இருக்கோம்” என்று மகா ரசிகன் ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்தினார்கள். இதில் சந்தானம் மட்டும், ‘இனிமே ஹீரோதான்’ என்ற முடிவை எடுத்ததும், இன்டஸ்ட்ரியில் பெரிய பள்ளம் விழுந்தது. அதை நிரப்பும் விதத்தில் ராப் பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தார் சூரி. யோகிபாபு, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என்று சிலர் செய்த காமெடி சேஷ்டைகளை அவ்வப்போது டி.வி யில் பார்த்து சோடா குடித்து ஜீரணித்துக் கொண்ட வடிவேலுவுக்கு, சூரியின் பர்பாமென்ஸ்சுக்கு மட்டும் அடி வயிறு கலங்க கலங்க ஆத்திரம் வந்தது. ஏன்? சூரியின் சேஷ்டைகள் அப்படியே வடிவேலுவை...

Read More

மதுரையை கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக ‘பாண்டியும் சகாக்களும்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பு கே.சாம...

<
மதுரையை கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக ‘பாண்டியும் சகாக்களும்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பு கே.சாமி இயக்கியிருக்கிறார். இசை சிகிச்சை என்கிற தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இசையில் உருவான 'பாண்டியும் சகாக்களும்' படப்பாடல்களும் மற்றும் படத்தின் டிரைலரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பி.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன். கலைத்தாய் என்னை தத்தெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தார்கள், நான் என்ன சிலுக்கா..? என்று கேட்டேன். ஆனாலும், நான் ஆடினால் படம் ஓடும் என்று நம்பி வருகிறார்கள், அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை என்றார். ...

Read More

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழகமெங்கும் பட்டிதொட்டி கிராமத்தில் கூட ராமராஜன் என்ற பெயர் தெரியாதவர்கள் இல்லை. கிட்டத்தட்ட 1 வருட காலம் த...

<
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழகமெங்கும் பட்டிதொட்டி கிராமத்தில் கூட ராமராஜன் என்ற பெயர் தெரியாதவர்கள் இல்லை. கிட்டத்தட்ட 1 வருட காலம் தமிழகமெங்கும் ஓடியது கரகாட்டக்காரன். அதன் பிறகு ராமராஜன் சினிமா வாழ்க்கை ஏறுமுகம் தான், திரையுலகில் உச்சத்தில் இருந்த போது பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் ராமராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், அவரை அருகில் இருந்து அவருடைய மனைவி நளினி கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் மக்களவை சார்பில் போட்டியிட்டு அப்பகுதியின் எம்பியாக ஆனார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது இவரை மிகவும் பாதித்ததாகவும், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை ராமராஜன் குடியிருக்கும்...

Read More

தமிழ் சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைக்கும், தெருவிற்கும் கொண்டு வரும். அந்த வகையில் 80களில் இவர் மைக் பிடித்தாலே சூப்பர் ஹிட் தான் படங...

தமிழ் சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைக்கும், தெருவிற்கும் கொண்டு வரும். அந்த வகையில் 80களில் இவர் மைக் பிடித்தாலே சூப்பர் ஹிட் தான் படங்கள். ஆனால், திடிரென்று இவர் சினிமாவை விட்டு காணமல் போக, ஒரு சில வருடங்களுக்கு முன் இவருக்கு எய்ட்ஸ் என்றும் கூறினார்கள். அதை தொடர்ந்து எந்த ஒரு படங்களும் இவருக்கு வரவில்லை, என்ன என்று விசாரித்தால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். இவரை பூ நாயகி மிகவும் காதலித்துள்ளார், இவர் கிடைக்காத சோகத்தில் தான் அவரே இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டாரம். ...

Read More

Search This Blog

Blog Archive

About