­
12/02/16 - !...Payanam...!

மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தா...

மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்! ஆவி, பிசாசு, பில்லி, சூனியம் என்று ஆர்டினரி தோசை சுடாமல், மெடிக்கல்… முற்பிறவி என்று ஹைடெக் பீட்சா சுட்டிருக்கிறார்கள். மொத்த மாவில் பாதி எழுத்தாளர் சுஜாதாவுக்கு சொந்தமானது. அவரது ‘ஆ’ என்கிற நாவல்தான் சைத்தான் பட ஃபார்முலா! மிச்ச மீதி கற்பனை படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியுடையது. அவ்ளோ பெரிய ஐடி நிறுவனத்தில், கஷ்டமான கம்ப்யூட்டர் புரோகிராம் கோளாறுகளை கூட சர்வ சாதாரணமாக சரி பண்ணிவிடும் விஜய் ஆன்ட்டனிக்கு, முதலிரவு அன்றுதான் அரைகுறை இரவே ஆரம்பிக்கிறது. மண்டைக்குள்ளிருந்து ஒரு குரல் கிளம்பி, “செத்துப் போ” என்கிறது அடிக்கடி! மனைவியிடம் காட்டிக் கொள்ளாமல் மறைக்கும் விஜய் ஆன்ட்டனி, விதவிதமான டிசைன்களில் தொல்லையை அனுபவிக்க… அவரே தன் நண்பனின் சாவுக்கும் காரணம் ஆகிறார். குற்றவுணர்ச்சியில் தவிக்கும் அவரை,...

Read More

காரி மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட கட்டித்தங்கம், இது செவலை மாட்டு சிறுநீரில் உற்பத்தி செய்த சொக்கதங்கம் என்பது போன்ற வாசகங்கள் இனி வரும...

காரி மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட கட்டித்தங்கம், இது செவலை மாட்டு சிறுநீரில் உற்பத்தி செய்த சொக்கதங்கம் என்பது போன்ற வாசகங்கள் இனி வரும் காலங்களில் நகைக்கடை விளம்பரங்களில் காணப்பட்டாலும் வியப்பில்லை. ஆம், குஜராத்தில் உள்ள ஜுனாகத் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கிர் மாடுகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்தபோது, அதில் தங்கத்தின் படிமம் இருப்பதையும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து 400 கிர் மாடுகளின் சிறுநீரை எடுத்து தனித்தனியாக சோதனை செய்து பார்த்த பொழுது அத்தனை மாடுகளின் சிறுநீரிலும் ஒன்று போலவே தங்கத்தின் துகள்கள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். சரி...மாடுகளின் சிறுநீரில் தங்கத்தின் துகள்கள் இருப்பது கண்டுபிடித்தாகி விட்டது. அடுத்தது சிறுநீரை காய்ச்சி சுண்ட வைத்து மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி அச்சில் ஊற்றி, வெல்லக்கட்டிகள் தயாரிப்பது போல தங்கக்கட்டிகள் தயாரிக்க போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாடுகளின் சிறுநீரில் தங்கம் இருப்பது பற்றி டாக்டர் வடிவேலிடம் பேசினோம். "கிர்...

Read More

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாக தொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்திய அளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்ற...

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாக தொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்திய அளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றே சொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும் கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்து கொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக் கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 'தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது?' என்ற கேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான் தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின் அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார். அவர்களும் அதை வழிமொழிந்து விட்டார்கள். ஆனால் அந்த தலைவர் பதவியை விட்டுத்தர வேண்டிய கருணாநிதியோ இன்னும் அமைதியாக...

Read More

Search This Blog

Blog Archive

About