March 09, 2018
<
தேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தற்போது கைவசம் பல படங்கள் உள்ளன. வில்லன், ஹீரோ என இரண்டு ட்ராக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர். தற்போது விக்ரமின் சாமி 2 பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார்.இந்நிலையில் அடுத்து பாபி சிம்ஹா ஒரு வெப் சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கிறது.சமீபத்தில் தான் நடிகர் மாதவன் நடித்த Breathe வெப் சீரியல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதை பின்பற்றித்தான் தற்போது வெப் சீரியல் தயாரிக்கும் முனைப்பில் ட்ரீம் வாரியர் நிறுவனம் இறங்கியுள்ளது. ...
March 09, 2018
பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா
March 09, 2018பாகுபலி படத்திற்க்கு பிறகு நடிகை அனுஷ்கா குறைந்த அளவிலான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் என்பதால் தான் ...
<
பாகுபலி படத்திற்க்கு பிறகு நடிகை அனுஷ்கா குறைந்த அளவிலான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் என்பதால் தான் இப்படி படவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழில் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார்.ஒரு புதிய தெலுங்கு படத்திற்காக தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் காரணம் கூறியுள்ளார். ...
March 09, 2018
காலா படத்தில் ரஜினி அணியும் அணைத்து உடையிலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது !
March 09, 2018கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார். அதே போல் கால...
<
கபாலி படத்தில் ரஜினி அணிந்த உடைகள் மிகப்பரவலாக பேசப்பட்டது. இந்த உடைகளை பிரபல உடைவடிவைமைப்பாளர் அனுவர்தான் தான் உருவாக்கினார்.அதே போல் காலப்படத்திலும் ரஜினியோட உடை கவனிப்பை அவரே உருவாக்கினார். இதுபற்றி கூறுகையில் "காலா படத்தை பொறுத்தவரை ரஜினிக்கு பிளாக் குர்தா,பல விதமான லுங்கி கள் அணிந்து நடித்துள்ளார்.இந்த உடைகள் அனைத்தும் காட்டன் துணியால் வடிவமைக்கப்பட்டு அதில் எம்ராய்டரிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ...
March 09, 2018
தமிழகத்தில் 15 ஆண்டுகளாகக் குப்பை ஆட்சி நடக்கிறது! கமல் காட்டம்
March 09, 2018தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் நட...
<
தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (India Today Conclave) பேசிய கமல்ஹாசன், நான் எனக்கான நேரத்தைவாழ்ந்து முடித்து விட்டேன். தற்போது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சிநடைபெற்று வருகிறது. அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறவே முயற்சி செய்வோம். பணம் சம்பாதிக்க நான் அரசியலில் இறங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் எனக்கானது இல்லை; மக்களுக்கான கட்சி. அரசியலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இனி எனக்கு இல்லை. என் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்தபடியே இறக்க விரும்புகிறேன்.நான், தி.மு.க தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின்அரசியலில் நான் ரசிக்கின்ற விசயங்கள் அதிகம் உள்ளது. அதனாலேயே அவர்களைச் சந்தித்தேன். விரைவில் கர்நாடக முதல்வர்சித்தராமையாவையும் சந்திக்க உள்ளேன். நான் பாஜக-விற்கு...
March 09, 2018
நான் BJP-க்கு எதிரானவன் இல்லை, ஆனால் BJP-யின்? கமல் தெறி பதில்
March 09, 2018கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார். இதை தொட...
<
கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார். இவர் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன், எப்போதும் அரசியல் தான் என கூறிவிட்டார்.இதை தொடர்ந்து கமல் பல நிகழ்வுகளில் கலந்து வருகின்றார், நேற்று காலை சென்னையின் பிரபல கல்லூரிக்கு சென்றார்.மாலை மகளிர் தினத்தை முன்னிட்டு சாதித்த பெண்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினார்.இதை தொடர்ந்து நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன் என்று கூறியுள்ளார். ...
March 09, 2018
யுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா?- அவரது மனைவி கூறிய தகவல்
March 09, 2018தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும்...
<
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எப்போதும் மிகவும் அமைதியாக இருப்பார்.தற்போது அவரை பற்றி அவரது மனைவி சாப்ரூன் நிசார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். நீங்கள் நினைப்பது போல் யுவன் ஷங்கர் ராஜா மிகவும் அமைதியானவர் கிடையாது. அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியும் அவர் எப்படி காமெடி செய்பவர் என்று. வெளியில் மட்டும் தான் அமைதி என்றார்.யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகி ரைசாவுக்கு ஆடை வடிவமைப்பு செய்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா மனைவி. ...
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
March
(136)
-
▼
Mar 09
(6)
- சீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா! படவாய்ப்பு குறைந்...
- பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா
- காலா படத்தில் ரஜினி அணியும் அணைத்து உடையிலும் ஒரு ...
- தமிழகத்தில் 15 ஆண்டுகளாகக் குப்பை ஆட்சி நடக்கிறது!...
- நான் BJP-க்கு எதிரானவன் இல்லை, ஆனால் BJP-யின்? கமல...
- யுவன் ஷங்கர் ராஜா உண்மையில் இப்படிபட்டவரா?- அவரது ...
-
▼
Mar 09
(6)
-
▼
March
(136)