­
11/10/16 - !...Payanam...!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது குறித்த அறிவிப்புக்கு ஆர்.டி.ஐ மூலம் கேள்விகளை கேட்டுள்ளார். அத...

<
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது குறித்த அறிவிப்புக்கு ஆர்.டி.ஐ மூலம் கேள்விகளை கேட்டுள்ளார். அதன் விவரம்.. * ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும். * ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும். * ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவானது ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு எந்த அடிப்படையில் எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...

Read More

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தவுடன் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவது எப்படி? என கூகுளில் அதிகம் பேர் தேடியுள்னர்....

<
ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தவுடன் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவது எப்படி? என கூகுளில் அதிகம் பேர் தேடியுள்னர்.  நாட்டில் கறுப்பு பணத்தை மீட்பதற்காக ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. பாராட்டுகளையும், விமர்சனங்களும் இதற்கு குவிந்து வரும் நிலையில் சத்தமே இல்லாமல் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. அதன்படி, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுள் தகவல்படி, இதில் ஹரியானா  மாநிலத்தில் அதிகம் கறுப்பு பணத்தை மாற்றுவது குறித்து கூகுளை நாடியுள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக  குஜராத், மஹாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் உள்ளன. மேலும், புழக்கத்துக்கு வந்துள்ள புதிய ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்கள் குறித்தும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். ...

Read More

சிம்புவுக்கே கூட இது இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம். கவுதம் மேனன் கொடுத்த சர்டிபிகேட் அப்படி! சிம்புவோடு டிராவல் பண்ணுவது என்பது, மதயானையை தூ...

<
சிம்புவுக்கே கூட இது இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம். கவுதம் மேனன் கொடுத்த சர்டிபிகேட் அப்படி! சிம்புவோடு டிராவல் பண்ணுவது என்பது, மதயானையை தூக்கி மடியில் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்றுதான் டைரக்டர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் நேற்று கவுதம் மேனன் சிம்புவை பற்றி சொன்ன வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விஷயம். “சிம்பு சொன்ன நேரத்துக்கு ஷுட்டிங்குக்கு வரமாட்டார் என்பது நிஜம்தான். ஆனால் லேட்டா வந்தாலும், அவ்வளவு ஈசியா நடிச்சுட்டு போய்டுவார். அதுமட்டுமில்ல… நான் வொர்க் பண்ணிய ஹீரோக்களிலேயே சிம்புதான் ரொம்ப கம்பர்ட். மற்ற ஹீரோக்கள்ட்ட அந்த எக்ஸ்பீயன்ஸ் எனக்கு கிடைச்சதில்ல. திரும்பவும் நான் சிம்புவை வச்சு படம் பண்ண ஆசைப்படுறேன்” என்றார். அவரது இந்த பதில் பிரஸ்சுக்கே கூட பேரதிர்ச்சிதான். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டது சிம்புவுக்கு. ம்ஹ்ம்ம்… அதையெல்லாம் நேரில் கேட்க அவருக்குதான் கொடுத்து வைக்கவில்லை. ஏன்யா ஏன்?...

Read More

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான ...

<
ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த் அடித்து நின்ற அந்த இயக்குனரிடம், “ஒரு பைசா கொள்ளையடிச்சா தப்பில்ல. ஒரு ஒரு பைசவாவா ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிச்சா தப்புதானே?” என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் கையை பிசைந்தார் அவர். படத்தில் அதிகாரிகள் பற்றி அவர் வைத்த சில டயலாக்குகள்தான் அந்த ரெய்டுக்கே காரணம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்கள் கொடுப்பதும் கருப்புப்பணம்தான். நடிகர்கள் கையை நீட்டி வாங்குவதும் கருப்புப்பணம்தான். பாதி கருப்பு, பாதி வெள்ளை என்ற தத்துவத்தை மீறி யாரும் படமெடுப்பதுமில்லை. யாரும் நடிப்பதுமில்லை. நல்லா படிச்ச ஆடிட்டர்கள் துணையோடு தப்பி வந்தவர்கள், மூட்டை மூட்டையாக 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை கட்டி பதுக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு காமெடி நடிகருக்கு நல்ல பழக்கம்...

Read More

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்...

<
ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்கும் கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், முயல்களும் சிக்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா. நவம்பர் 8 ந் தேதி முன்னிரவில் அவர் அறிவித்த அறிவிப்பு படி, அன்றிரவிலிருந்தே 500 ரூபாய் நோட்டுகளும் 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது! தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவே கருப்புப்பணத்தை நம்பிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற பைனான்சியர்களும் கருப்பு பணத்தைதான் கொடுக்கிறார்கள். வட்டியும் மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி என்று கழுத்தை திருகி வாயில் வைத்து நசுக்குகிறது. இப்படி பேய் ஓட்டுகிற புளோட்டிங் முறையில், கஷ்ட நஷ்டம் இருந்தாலும் களிப்பும் இனிப்புமாக அதை செய்து கொண்டிருக்கிறது சினிமா பீல்டு. சரி… மேட்டருக்கு வருவோம். கடந்த சில மாதங்களுக்கு முன் அஜீத்,...

Read More

Search This Blog

Blog Archive

About