August 08, 2018
<
ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.பெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக்...
August 08, 2018
ஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி
August 08, 2018மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் ...
<
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.காவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.மருத்துவமனை வளாகம் வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அவர்கள் கதறும் அழுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.இரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் சாந்தகுமார்.தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’...
August 08, 2018
கருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாரே ராதிகா
August 08, 2018கருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்த...
<
கருணாநிதி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் அளித்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கல் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்படியிருக்க திமுக-வில் ஆரம்பக்காலத்தில் இருந்தவர் ராதிகா சரத்குமார். இவர் கருணாநிதியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆனால், இன்று தன் மகனின் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால், அங்கு செல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் ராதிகா டுவிட் செய்துள்ளார். ...
August 08, 2018
ரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கசிந்த தகவல்
August 08, 2018ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார். இந்நிலை...
<
ரஞ்சித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இவர் இயக்கத்தில் ரஜினியே இரண்டு படம் நடித்துவிட்டார்.இந்நிலையில் ரஞ்சித் அடுத்து நமா பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படத்த இயக்கவுள்ளார், இப்படம் வரலாற்று பின்புலம் கொண்ட கதையாக இருக்கும் என கூறியுள்ளார்.இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் முயற்சியே என கூறப்படுகின்றது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது. ...
August 08, 2018
கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்?
August 08, 2018தி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ர...
<
தி.மு.க தலைவரான கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.தற்போது இவரின் உடல் இராணுவ மரியாதையுடன் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.இங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கருணாநிதி தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.கடந்த 1955-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த காலத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீட்டை கருணாநிதி வாங்கியுள்ளார்.அதன் பின் 1968-ஆம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்தார்.இதையடுத்து 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 86-வது பிறந்த நாளின் போது, தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டை கருணாநிதி அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார்.கருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.இந்த அறக்கட்டளை கருணாநிதியின்...
August 08, 2018
கருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய பிரபு... எதற்காக தெரியுமா?
August 08, 2018கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்...
<
கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது.நடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது,என் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார். அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.என் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார். திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.பெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார்....
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
August
(58)
-
▼
Aug 08
(6)
- சீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)
- ஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயல...
- கருணாநிதி இறப்பின் போது இப்படி ஒரு இடத்தில் மாட்டி...
- ரஞ்சித் அங்கு செல்ல இவர் தான் முக்கிய காரணமாம்- கச...
- கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீடு என்னவாகும்?
- கருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய...
-
▼
Aug 08
(6)
-
▼
August
(58)