­
12/03/16 - !...Payanam...!

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்ச...

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்சியும்தான் மாவீரன் கிட்டுவின் கதை. கதை முழுக்கவும் 1987ல் நடக்கிறது. பொதுவழியில் பிணத்தைக்கூட கொண்டு செல்லவிடாமல் தடுக்கிற ஆதிக்கசாதியினர் ஒருபக்கம், கல்விகற்று முன்னேறி தங்களுடைய வாழ்வை மாற்றிக்கொள்ள துடிக்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்னொருபக்கம். என்றாவது ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பது ஒன்றுதான் ஒடுக்கப்பட்டமக்களின் ஒரே லட்சியம். பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைசேர்ந்த விஷ்ணு விஷால்.அவரை படிக்கவைப்பவர் ஊர்மக்களின் பிரச்னைகளுக்கெதிராகவும் குரல்கொடுக்கும் பார்த்திபன். தம் மக்களின் நிலை மாற வேண்டுமானால், விஷ்ணு விஷால் படித்து கலெக்டராக வேண்டும் என்ற பார்த்திபனின் வார்த்தைகளை சிரமேற்கிறார் விஷ்ணுவிஷால். இதற்கிடையே ஆதிக்கசாதி மக்களால் விஷ்ணுவிஷாலுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக அவர்களை முடக்க பல சதிவேலைகள் தீட்டப்படுகின்றன. பார்த்திபன் உதவியோடு மக்கள் போராட்டம்...

Read More

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், பிரதம...

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு. ...

Read More

டைம் இதழ் நடத்தும்  இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில் உள்ளார். ஒபாமா, ...

டைம் இதழ் நடத்தும்  இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், மோடி முன்னிலையில் உள்ளார். ஒபாமா, புதின், ட்ரம்ப் உள்ளிட்டோரை விட அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் மோடி. இன்றைய நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முதல் நிலையிலும், 5% வாக்குகள் பெற்று ஒபாமா இரண்டாவது நிலையிலும் உள்ளனர்.  யார் இந்த ஆண்டின் சிறந்த நபர் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் இன்று நிலவரப்படி, 18% வாக்குகள் பெற்று மோடி முன்னிலை வகிக்கிறார். எனவே உலகின் 2016 சிறந்த நபராக மோடி தேர்வாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About