December 03, 2016
'கிட்டுவின் தியாகம், ரசிகர்களை ஈர்த்ததா..?' - மாவீரன் கிட்டு விமர்சனம்
December 03, 2016 கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்சியும்தான் மாவீரன் கிட்டுவின் கதை. கதை முழுக்கவும் 1987ல் நடக்கிறது. பொதுவழியில் பிணத்தைக்கூட கொண்டு செல்லவிடாமல் தடுக்கிற ஆதிக்கசாதியினர் ஒருபக்கம், கல்விகற்று முன்னேறி தங்களுடைய வாழ்வை மாற்றிக்கொள்ள துடிக்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்னொருபக்கம். என்றாவது ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பது ஒன்றுதான் ஒடுக்கப்பட்டமக்களின் ஒரே லட்சியம். பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைசேர்ந்த விஷ்ணு விஷால்.அவரை படிக்கவைப்பவர் ஊர்மக்களின் பிரச்னைகளுக்கெதிராகவும் குரல்கொடுக்கும் பார்த்திபன். தம் மக்களின் நிலை மாற வேண்டுமானால், விஷ்ணு விஷால் படித்து கலெக்டராக வேண்டும் என்ற பார்த்திபனின் வார்த்தைகளை சிரமேற்கிறார் விஷ்ணுவிஷால். இதற்கிடையே ஆதிக்கசாதி மக்களால் விஷ்ணுவிஷாலுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக அவர்களை முடக்க பல சதிவேலைகள் தீட்டப்படுகின்றன. பார்த்திபன் உதவியோடு மக்கள் போராட்டம்...