June 16, 2019
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஏகப்பட்ட மர்மங்கள் நடந்ததே கவனீச்சிங்களா?
June 16, 2019<
என்னவோ நடக்குது, ஒன்னுமே புரியலைன்னு இந்திய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து.எல்லாம் ஆரம்பித்தது, ரோகித் ஷர்மா அவுட்டானதில் இருந்து. அதிலும், இந்திய பந்து வீச்சின்போது, இன்னும் சில பல நிகழ்வுகள் மர்மமாகத்தான் இருந்தன.சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார் ரோகித் ஷர்மா. ஆனால், திடீரென சம்மந்தமே இல்லாமல் ஒரு ஸ்கூப் ஷாட் ஆடி, நேராக ஷாட் ஃபைன் லெக்கில் நின்று கொண்டிருந்த வகாப் ரியாசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஏன் அடித்தார்அவர் எதற்காக அப்படி ஒரு ஷாட்டை அடித்தார் என்று அவருக்கும் தெரியவில்லை, ரசிகர்களுக்கும் புரியவில்லை. எனவேதான், கோபமாக பேட்டை காற்றில் வேகமாக அடித்துவிட்டு கிளம்பினார் ரோகித் ஷர்மா. பீல்டர் அங்கே நின்றதை கூட ரோகித் ஷர்மா கவனிக்காமல்தான் அந்த ஷாட்டை அடித்ததாக வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.பேட்டிலேயே படவில்லைஇதன்பிறகு, விராட் கோலி நன்றாக பேட் செய்து கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், அனுபவ வீரரான அவர் களத்தில்...