­
01/09/17 - !...Payanam...!

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள...

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவரின் துணையின்றியே நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின்போது மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே“பிரசவ நேரத்தில் அனுமதிக்கப்படும் சொந்தங்களால், வலியால் துடிக்கும் பெண்ணுக்கு தொடர்ச்சியான நேரடி ஆதரவை வழங்க முடியும். குறிப்பாக, பெண்களை உடன் அனுமதிக்கும் போது, வசதியாக உணரச் செய்து, இயற்கையான முறையில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையை தவிர்த்து, குறைந்த செலவிலான இயற்கை...

Read More

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன...

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன்று ஒளிபரப்புவார்களே அடேயப்பா. சண்டை, மோதல், அழுகை, விலகிப்போவது என ஏதாவது சீரியஸ் ஆன சீன்களை ப்ரோமோவாக போட்டு பலரின் கவனத்தை திருப்பிவிடுவார்கள். ஆனால் அதில் சில உண்மையல்ல என அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சில மாதங்களுக்கும் முன் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த சிம்புவுக்கும், அதில் நடனமாடிய டிங்குவுக்கும் சண்டை வருவதுபோல காண்பிக்கபட்டு பின் அது உண்மையல்ல என சொல்லப்பட்டது. அதே நிகழ்ச்சியில் தற்போது நடக்கும் சீசனில் காமெடி நடிகராக இருந்த தாடி பாலாஜியும் அவரது மனைவியும் ரியல் ஜோடியாக நடனமாடுகிறார்கள். இதில் ஒரு எபிசோடில் தாடி பாலாஜி நான் என மனைவியை அடித்திருக்கிறேன், கடுமையாக திட்டியிருக்குகிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன் என கூறினார். அதற்கு...

Read More

21 வயதே ஆன இளைஞரிடமிருந்து ஓர் ஆச்சர்யமூட்டும் கச்சிதமான த்ரில்லர் சினிமா, ‘துருவங்கள் 16’. ’சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம...

21 வயதே ஆன இளைஞரிடமிருந்து ஓர் ஆச்சர்யமூட்டும் கச்சிதமான த்ரில்லர் சினிமா, ‘துருவங்கள் 16’. ’சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது’ என்பதுதான் ஒன்லைன். ஒரு கொலை, அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர்.  பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும்போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது ‘துருவங்கள் பதினாறு’. குறும்பட இயக்குநர்களிலிருந்து, தமிழுக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு அறிமுகஇயக்குநர் கார்த்திக் நரேன்.  ஒரு காட்சியைக்கூட பார்வையாளர்கள் தவறவிடாதபடி சம்பவங்களின் அடுக்கடுக்கான பிணைப்புகள், விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களைக் கையாண்டது ஆகியவற்றில் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். வாழ்த்துகள் கார்த்திக் நரேன்! கோவையில் நள்ளிரவில் கொலை ஒன்று நடக்கிறது. தற்கொலையாக பதியப்படும் இந்தக்கொலையை யார் செய்திருப்பார் என்பதைக் கண்டுபிடிக்கும் போலீஸ்...

Read More

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை ...

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை வெற்றிகரமாக அடக்கி அதை வென்றுவிட்டால் ஆயிரம் மகுடம் தன் தலையில் ஏறுவதுபோல் நினைக்கும் வீரன். மற்றொருவர் வீரன் என்று எவரும் இல்லாமல் தன் காளை வென்றால் களத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முன்பு மீசையை முறுக்கிவிட்டு நடந்து செல்லும் மாட்டின் சொந்தக்காரர். ஜல்லிக்கட்டு என்றால் என்ன? மாட்டுப்பொங்கல் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான மாட்டுப் பொங்கலன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.  இதை ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிட்டு அழைத்து வந்தனர் தமிழர்கள். குறிப்பிட்ட அந்த நாளில் 'வாடிவாசல்' என்று ஓர் இடத்தை அமைத்து வீரர்கள் விளையாட இடம் ஒதுக்கித் திருவிழா போல் கொண்டாடும் நாள்தான் ஜல்லிக்கட்டு. இதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். முன்பு இதை 'சல்லிக்கட்டு' என்று அழைத்து வந்தனர்...

Read More

Search This Blog

Blog Archive

About