­
12/11/16 - !...Payanam...!

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில்...

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கிறது டீம்.நிஜமாகவே “தி பாய்ஸ் ஆர் பேக்” தானா...! சென்னை ஷார்க்ஸ் டீம் முதல் பாகத்தில் ராக்கர்ஸை செமி ஃபைனலில் ஜெயித்து இத்தோடு  10 வருடங்கள் ஆகிவிட்டன. ப்ளேயர்ஸ் எல்லோருமே வேறுவேறு இடத்தில் வேலை, மனைவி, குழந்தை என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெய் திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். ஐடியில் வேலை செய்யும் ஜெய்யின் காதலி தான் சானா அல்ஃதாப். இவர்களின் திருமணத்திற்காக சென்னை 28 டீம், தேனி பக்கம் ட்ரிப் அடிக்கிறார்கள்.  அரவிந்த் ஆகாஷ் தேனியில்  ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன். அவரது அணிக்கு கடும் சவாலாக எட்டு வருடங்களாக கோப்பையை வென்று கொண்டிருக்கிறது வைபவின் அணி. தனது டீம் நண்பர்கள் தேனியில் வந்து...

Read More

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'. சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார்...

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'. சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார் ஹீரோ லுத்ஃபுதீன். அவரின் நண்பரான சதீஷின் வீட்டில் தங்குகிறார். வந்த வேலையைப் பார்ட்டைமாகப் பார்த்துக் கொண்டு ஃபுல்டைமாகத் தனக்கு ஒரு காதலியைத் தேடி அலைகிறார். சதீஷின் காதலி தொடங்கிப் பார்க்கும் பெண் மீதெல்லாம் லவ்வோ லவ். இதற்கு இடையில் உனக்கெல்லாம் லவ்வா என நண்பர்கள் கலாய்க்க தனக்கென ஒரு காதலி இருப்பதாகப் பொய் சொல்கிறார். அலுவலக நண்பன் ஆர்.ஜே.பாலாஜி உதவியுடன் சீனப் பெண் ஒருத்தியின் ஃபேக் ஐடி உருவாக்கி ஆதாரத்தையும் காட்டுகிறார். தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஃபேக் ஐடி உருவாக்கியதை தெரிந்து கொள்ளும் அந்தச் சீனப் பெண் லுத்ஃபுதீன் மேல் கோபமாகி ஃபாலோ செய்கிறார். காதலை வைத்து நண்பர்களிடம் சீன் போடும் நேரத்தில் லுத்ஃபுதீனின் வீட்டில் அவருக்கு ஒரு பெண் பார்க்கிறார்கள் அந்தப் பெண்ணும் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் தான்...

Read More

முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கும் சோகத்தை தந்தது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்நிலைய...

<
முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கும் சோகத்தை தந்தது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் சார்ந்தோர்கள் அனைவருக்கும் என் இரங்கல்கள் என்று தெரிவித்திருந்தார், இதற்கு பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், தற்போது ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியில் பெரும் வெற்றிடம் எழுந்துள்ளது, மக்கள் யாரும் அவருடைய தோழி சசிகலாவை ஆதரிக்கவில்லை. ஆனால், கட்சியில் எல்லோரும் அவருடைய பெயரை அடுத்த தலைமைக்கு குறிப்பிட்டுள்ளனர். இதை தான் கமல் அன்றே இப்படி குறிப்பிட்டு இருந்தார் என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். மீண்டும் அவர் டுவிட்டை படியுங்கள் உங்களுக்கே புரியும்... சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ...

Read More

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீ...

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம். சென்னை 28 ன் பேச்சுலர் டீம், பத்து வருஷங்களுக்கு பின் குடும்பம் குட்டியுமாக திரிகிற நண்பர்களோடு அறிமுகம் ஆகிறது. “இவன்தாங்க அவன்… அவன்தாங்க இவன்” என்றெல்லாம் முன் அறிமுகம் கொடுக்கிற ஸ்டைல் அரத பழசு என்றாலும், வெங்கட்பிரபு தருகிற அந்த முன்னோட்டம், முதல் பார்ட் பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் ஆகக் கூட இருக்கலாம்! நண்பன் ஜெய்யின் லவ் மேரேஜ் நிச்சயதார்த்தத்திற்காக தேனிக்குப் போய் இறங்குகிறது பிரேம்ஜி. சிவா, நித்தின், உள்ளிட்ட பிரண்ட்ஸ் டீம். அதுவும் சக பத்தினிகளுடன். போன இடத்தில் பத்து வருஷத்துக்கு முன்...

Read More

அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வ...

<
அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார். இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது.இதற்கு தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றார் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர். ...

Read More

Search This Blog

Blog Archive

About