­
05/30/19 - !...Payanam...!

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது....

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. லோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால்...

Read More

இன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்...

<
இன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்கிறது.வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தில் தலையில் சுத்தி விழுந்ததால் அவரது உடல் நிலை நலம் பெற வேண்டி பிராத்தனை நடத்தி வருகின்றனர்.பிராத்தனை என்றால் சிறிய அளவில் எல்லாம் இல்லை. டுவிட்டரில் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டாகி பிராத்தனை நடந்து வருகிறது.#Nesamani என்ற ஹேஷ் டேக்கில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை விளக்கும் #ModiSarkar2 என்ற ஹேஷ் டேகில் வெறும் 18 ஆயிரம் டுவிட்கள் தான் வெளியாகியுள்ளன.உலகளவில் நேசமணி ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலும், மோடி சர்கார் ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...

Read More

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டா...

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதிலும் வடிவேலு தான் பயன்பட்டிருக்கிறார்.இதற்கு பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர். அதாவது, பேஸ்புக்கில் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் படத்தை பதிவிட்டு, அதற்கு தமிழில் என்ன பெயர் என்று கேள்வி எழுப்பியிருந்தது.அதற்கு நெட்டிசன் ஒருவர், ”இதற்கு பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என்று சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பதிலாக #PrayForNesamani எனப் பதிவிட, பலரும் அதையே மீண்டும் பதிவிடத் தொடங்கி வைரலானது. அதாவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்கள் கூட, நேசமணிக்கு பிரார்த்தனை செய்யும் வகையில் ஏராளமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.இதன் பின்னணியில் குறும்புக்கார நெட்டிசன் விக்னேஷ் பிரபாகர். இவரை தற்போது நேசமணி பிரபாகர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்....

Read More

Search This Blog

Blog Archive

About