இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் படம் - ‘படித்தவுடன் கிழித்துவிடவும்‘!

‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படம் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் ஒரு ஹரார் படம். வடிவேலுவின் காமெடி வசனத்தை ஒரு படத்திற்கு தலைப்பா...

‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படம் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் ஒரு ஹரார் படம்.

வடிவேலுவின் காமெடி வசனத்தை ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். அதுதான் “படித்தவுடன் கிழித்துவிடவும்“. இந்த படத்தை ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.உஷா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.எம்.டி.கருணாநிதி அறிமுகமாகிறார். இந்தப் படத்தை செ.ஹரிஉத்ரா இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

‘படித்தவுடன் கிழித்துவிடவும்‘ படம் பற்றி இயக்குனர் செ.ஹரிஉத்ரா கூறுகையில், “ஒரு அரசியல்வாதி இன்சூரன்ஸ் மோசடி செய்கிறார். அவரை இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி பழிவாங்குகின்றன என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்’’ என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About