குப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் எவ்வளவு அற்புத நன்மைகள் தெரியுமா ?

பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது. காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல...

பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது.

காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல் தான் அதன் தோலிலும் நிறைந்துள்ளது.

இது சரும அழகிற்கு பெரும் பங்களிப்பு செய்கின்றது.

காய்கறி தோள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

வெள்ளரிக்காய் தோல்

வெள்ளரிக்காயை தோல் நீக்கிய பிறகு, கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை இது தரும்.

இவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோலை நாம் குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு.

வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும்.

அத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.

பாகற்காய் தோல்

பாகற்காய் தோலில் ஒரு அற்புத மகத்துவம் உள்ளது. இதனை புண் தழும்புகள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அத்துடன் அவற்றில் உள்ள கிருமிகளையும் அழிக்கும்.

உருளை கிழங்கு தோல்

இந்த தோலை கொண்டு உங்கள் முக அழகை எளிதாக பெறலாம். இதன் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை முகத்தில் ஒட்டினால் முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட் தோல்

பீட்ரூட்டின் தோலை சீவிய பிறகு அதனை தாடை மற்றும் உதடுகளில் தடவினால், மிகவும் அழகாக மாறும். அத்துடன் பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும்.

தக்காளி தோல்

தக்காளியின் தோலில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன.

இதனை முகத்தில் தடவினால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன், முகம் மின்னவும் செய்யும்.

கருணை கிழங்கு

நாம் வேண்டாம் என்று வீசும் இந்த கருணை கிழங்கின் தோலை முகத்தில் தடவி மசாஜ் செய்தாலே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் வெண்மையாக பொலிவு தரும்.

கேரட் தோல்

குப்பையில் போடும் இந்த தோலை எடுத்து அரைத்து முகத்தோலில் பூசினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். மேலும், முகம் வெண்மையாக தோற்றம் அளிக்கும்.

முள்ளங்கி தோல்

முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பவருக்கு இந்த முள்ளங்கி தோல் நன்கு உதவும்.

இதில் உள்ள வைட்டமின் பி6 சருமத்தை மிருதுவாக்கும்.

இந்த தோலை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் சருமம் பட்டுபோல மாறும். அத்துடன் தோலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சுவை அவ்வளவு அதிகமானது. அதே அளவிற்கு இதன் தோலிலும் நல்ல சத்துக்கள் உள்ளன.

இந்த தோலை கரு வளையத்தில் தடவினால் விரைவிலேயே இது மறையும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About