இம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோடி; ஷாங்காய் மாநாட்டில் செம அதிரடி!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி , தீவிரவாதத்தி...

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து வலுவாக போராட வேண்டும். தீவிரவாத இல்லாத சமூகத்தையே இந்தியா விரும்புகிறது.


கடந்த சனிக்கிழமை அன்று, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடந்த புனித அந்தோனி தேவாலயத்தை பார்வையிட்டேன். அங்கு தான் தீவிரவாதத்தின் கோர முகத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டன.

தீவிரவாதத்திற்கு நிதி வழங்கும், பாதுகாப்பு அளிக்கும், உதவி செய்யும் நாடுகள் களையப்பட வேண்டும் என்றார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.

அவர்களைக் கொண்டு இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். இதனை பல முறை கண்டித்தும் பாகிஸ்தான் கேட்ட பாடில்லை. சர்வதேச அமைப்புகள், வல்லரசு நாடுகள் உதவியுடன் பாகிஸ்தானை, இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.

ஆனால் தனது மோசமான செயல்பாட்டை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் தொடர்ந்து பேசிய மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இலக்கியம், கலாச்சாரமும் தான் சமூகத்தில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும். இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுக்க வேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுமையான அங்கத்தினராக மாற இந்தியாவிற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இதுவரை எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது என்று மோடி கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About