சமையல் செய்யும்போது இப்படியும் நடக்கலாம்... ஜாக்கிரதை!!

கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் ச...

கோபி் அருகே சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நா...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, வானலியில் இருந்த எண்ணெய் தீ பிடித்ததால் வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்து நாசமாகியது.

கோபி் அருகே பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்காக வானலியில் எண்ணெய் ஊற்றி வைத்து விட்டு வெளியே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

வானலியில் ஊற்றி வைத்திருந்த எண்ணெய் வெப்பம் அதிகமானதால் அடுப்பில் இருந்த தீ பிடித்து, மேலே பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.
சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து

இதைக்கண்ட கலா அதிர்ச்சியடைந்து கேஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருக்க அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சிலிண்டர் மீது தண்ணீர் உற்றியுள்ளார். ஏற்கனவே எண்ணெய் இருந்த இடத்தில் தண்ணீரை ஊற்றியதும் தீ மேலும் வேகமாக எரியத்தொடங்கியது.
சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து

அதற்குள் கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக சம்பவ இடத்துற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீடு முழுவதும் தண்ணீர் அடித்து பக்கத்து வீடுகளுக்கு தீ பரவமால் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமையல் செய்தபோது கவனக்குறைவால் தீவிபத்து- வீடு முழுவதும் எரிந்து நாசம்!

தக்க சமையத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் வீட்டில் இருந்த இரண்டு் சிலிண்டர்கள் வெடிக்காமலும், உயிர்சேதம் இன்றியும் காப்பாற்றப்பட்டது.

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About