பாக்கியராஜ் பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற முதியவர்...! என்ன காரணம் தெரியுமா?

பொதுவாக தவறு செய்பவர்கள் அதை தவறு என தெரிந்து செய்வது இல்லை. அவர்களது சூழ்நிலை மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் ஒரு...

பொதுவாக தவறு செய்பவர்கள் அதை தவறு என தெரிந்து செய்வது இல்லை. அவர்களது சூழ்நிலை மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் ஒரு தவறு செய்தால் மாட்டமாட்டோம் என்ற எண்ணத்தில் ஏதோ குருட்டாம்போக்கில் தவறை செய்து விடுகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவில் நடந்த சம்பவம் மிக வித்தியாசமாக நடந்தது. தவறு செய்ய வேண்டும், ஆனால் அது தவறாக இருக்ககூடாது, அதே நேரத்தில் தவறாகவும் இருக்கவேண்டும் என்று யோசனை செய்து ஒருவர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் ஒரு வங்கிக்குள் நுழைந்து கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். கத்தியுடன் ஒருவர் வங்கியில் மிரட்டியதை பார்த்த ஒருவர் போலீசிற்கு போன் செய்துள்ளார். போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசில் சிக்கிய பின் தான் அவர் செய்த வேலையே தெரியவந்தது. அவர் கையில் வைத்திருந்தது உண்மையான கத்தி அல்ல அது வெறும் பொம்மை கத்தி தான். மேலும் அவர் வங்கியில் நுழைந்து அந்த பொம்மை கத்தியை வைத்து பலரை மிரட்டினாரே தவிர வங்கியில் பணம் எதையும் அவர் கேட்கவில்லை எந்த ஒரு திருட்டு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.

இதை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்த போலீசார் பின்னர் ஏன் இவர் இவ்வாறு செய்தார் என விசாரித்தனர். அதில் தான் அவரின் பின்னால் உள்ள உண்மையான கதை தெரியவந்தது.

40 வயதான இவர் திருமணமாகாமல் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கு வேலையும் இல்லை. இதனால் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு முதுகு தண்டிலும் பிரச்னை இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுக்கவும் காசு இல்லாமல் இருந்துள்ளது.

அதனால் அவர் ஏதேனும் தவறு செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றால் அங்கு அவரது நோயிற்காக சிகிச்சை அரசால் இலவசமாக வழங்கப்படும் என்பதால் இதை செய்துள்ளார்.

தென் கொரியாவில் கடுமையான வேலைவாய்ப்பின்மை பிரச்னை நிலவுகிறது. கடந்த 2017ம் ஆண்டிற்கு பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 2018ல் தென்கொரியாவில் மொத்தம் 9.09 லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்துள்ளனர். அது 2019 பிப்ரவரி மாதம் 13 லட்சமாக மாறியுள்ளது.

இந்த இளைஞருக்கு வேலை வாய்ப்பின்மைக்காவே இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About