ஆஸ்கருக்கு பரிந்துரையான வில்லேஜ் ராக்ஸ்டாருக்கு ரூ.50 லட்சம் பரிசு; அசாம் அரசு கௌரவம்!

வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையி...

வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையில் திரையிடப்பட்டன. அதில் ராஸி, பத்மாவத், வில்லேஜ் ராக்ஸ்டார் உள்ளிட்ட 28 படங்கள் அடங்கும்.

இந்த வரிசையில் அசாமி மொழிப்படமான வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தையும் அனுப்ப ஆஸ்கர் தேர்வுக் குழுவினர் முடிவு செய்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத அசாமிய கிராமம். அங்கு வாழும் சிறுமி துனு, கிதார் வாசிப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்.

தனது கிராமத்தில் ஒரு இசைக்குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். தனது கனவை வென்றாரா என்பதை அற்புதமாக ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த கலை பங்களிப்பு ஆகிய 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் அசாம் மாநில அரசு வில்லேஜ் ராக்ஸ்டார் படத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை, மாநில சட்டசபையில் நிறைவேற்றி, அதன் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About