சன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ
January 18, 2019விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்...
விஜய் சேதுபதியும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அது எந்த வகையான நிகழ்ச்சி என்ற விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறித்து ட்விட்டரில் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
முதன் முறையாக
வினா நான், விடை அவர்கள்!@SunTV #TheNewHostInTown @NoiseAndGrains @VisionTime
“அந்த கதைல அவங்க தான் ஹீரோ
நான் ஹீரோ Friend” pic.twitter.com/eqoAvWHLfB
— VijaySethupathi (@VijaySethuOffl) December 10, 2018
விஜய் சேதுபதி சொல்வதை பார்த்தால் விஷாலை போன்று சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் ஹீரோ அல்ல ஹீரோவின் நண்பன் என்கிறார் அவர்.
நிஜ வாழ்க்கையின் ஹீரோக்களை நமக்கு காட்ட உள்ளார் விஜய் சேதுபதி.
மோடியின் வாழ்க்கையும் படமாகிறது: அஜித் வில்லன் தான் 'நமோ' #PMNarendraModi
January 05, 2019பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. அந்த படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வர...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் இந்தியில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையையும் படமாக்குகிறார்கள்.
விவேக் ஓபராய்
நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடிக்கிறார். படத்திற்கு பி.எம். நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமங் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் துவங்குகிறது.
முதல்வர்
பி.எம். நரேந்திரமோடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 23 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. போஸ்டரை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வெளியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்
ஃபட்நாவிஸை வைத்து போஸ்டரை வெளியிடலாம் என்று நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பளர் சந்தீப் சிங் மற்றும் விவேக் ஐடியா கொடுத்தார்களாம். போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடக்கிறது. அன்றைய தினமே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர்
மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அனுமதி கிடைத்ததாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை குஜராத்தில் ஷூட் செய்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மோடியின் வாழ்க்கையும் படமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ்ஸில் போகும்போது பிஸ்கட் சாப்பிடக்கூடாது... ஏன்னு தெரியுமா?
January 05, 2019ஏழைக் குடும்பங்கள், நடுத்தரக் குடும்பம், பணக்கார வீடுகள் என எல்லா வகையான வீடுகளிலும் ஸ்நாக்குக்காக நிச்சயம் பிஸ்கட்டுகள் வாங்கி வைத்திருப்ப...
என்ன அது அவரவர் பொருளாதாரத்தைப் பொறுத்து ருசி, விலை, பிளேவர் என வேறுபாடு இருக்கும். அவ்வளவு தான்.
ஆரோக்கிய ஸ்நாக்ஸ்
பிள்ளைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் கொடுப்பதற்கு, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் என நம்முடைய முதல் ஸ்நாக்ஸ் சாய்ஸ் எதுவென்றால் அது பிஸ்கட்டாகத் தான் இருக்கும். அது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்ற பிம்பம் நம்மிடையே இருப்பது தான் இதற்குக் காரணம். அதனாலேயே பெரியவர்கள் கூட, தங்களுடைய தொலைதூரப் பயணங்களின் உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். அது எவ்வளவு பிரச்சினைகளை உண்டாக்கும் என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
விளம்பரங்கள்
மற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது எப்படி உடலுக்குக் கெடுதல் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அதில் சிறிதளவு கூட பிஸ்கட் பற்றி வெளியாவதில்லை. பொதுவாகவே குழந்தைகள் பால் குடிக்கவும் சாப்பிடவும் அடம்பிடிக்கும். இதில் 4 பிஸ்கட் சாப்பிட்டால் ஒரு கிளாஸ் பால் குடிப்தற்குச் சமம் என்று விளம்பரம் வந்தால் பெற்றோர்களும் எளிமையாக குழந்தைகளை சாப்பிட வைப்பது பற்றித் தானே யோசிப்பார்கள். இனியாவது இதுபற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
உணவுக்குப் பதிலாக
இப்படி நம்முடைய வாழ்க்கையில் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கும் இந்த பிஸ்கட் உண்மையிலேயே நம்முடைய உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா? என்று ஊட்டச்சத்து நிபுணர்களிடம் நாம் கேட்டால் நிச்சயமாகக் கூடாது என்கிறார்கள்.
ஆபீஸ் மீட்டிங் முதல் இது முக்கிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. சிலர் காலை உணவுக்கு காபி (அ) பால், பிஸ்கட்டையே எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தான உணவு என்பதும் இந்த பிஸ்கட்டுகள் மிருதுவாக வருவதற்கு இதில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டிரான்ஸ் ஃபேட் (trans fat)
பிஸ்கட்டில் வெறும் மாவுப்பொருள் தான் இருக்கிறது. கொழுப்புச்சத்து இல்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
பிஸ்கட் நல்ல சுவையும் வடிவமும் பெறுவதற்கான சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், கலர்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட்டின் காலாவதி நாட்களை அதிகப்படுத்துவதற்காக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இது காலப்போக்கில் நம்மடைய உடலில் டிரான்ஸ் ஃபேட் (trans fat) என்னும் கெட்ட கொழுப்பாக மாறி பல பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
புரதத்தை எப்படி கண்டுபிடிப்பது?
பொதுவாகவே புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள் மற்ற உணவுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் மிருதுவாக இருக்கும். அப்படி மிருதுவாக இருந்தால் அதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது என்றும் அதேசமயம் மிருதுத்தன்மை குறைவாக இருந்தால் அதில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.
உண்டாகும் நோய்கள்
சுக்ரோஸ் அதிகம் கொண்ட சர்க்கரை தான் பிஸ்கட்டில் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. இது நம்முடைய உடலில் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடுகிறது. அதோடு இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் ஆகியவை உண்டாவதற்குப் பெரும்பாலும் இந்த பிஸ்கட்டுகள் தான் காரணமாக அமைகின்றன.
உப்பு பிஸ்கட்டுகள்
சிலரோ இனிப்பு பிஸ்கட்டுகள் வாங்கி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகிவிடும் என்று அதற்கு பதிலாக உப்பு பிஸ்கட்டுகளை வாங்கிச் சாப்பிடுவதை கவனித்திருப்போம். ஆனால் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உப்பு பிஸ்கட்டுகளில் அதிக அளவில் சோடியம் பை கார்பனேட் இருக்கிறது. அது நம்முடைய உடலின் சோடியம் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். இதனால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் ஆகியவை உண்டாக ஆரம்பிக்கும்.
உடல் எடை
பொதுவாக நீங்கள் நன்கு கவனித்தால் உங்களுக்குத் தெரியும், உடல் எடையைக் குறைப்பதற்கான டயட்டில் இருப்பவர்கள் ஸ்நாக்ஸ்கள் மற்றும் அதிக அளவிலான அரிசி உணவைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கட்டாயமாக பிஸ்கட்டுகளைச் சாப்பிடுவார்கள். ஆனால் அதிலுள்ள டிரான்ஸ் ஃபேட் (trans fat) என்னும் கெட்ட கொழுப்பு நம்முடைய உடலில் அதிகமாகிக் கொண்டே போகும். இதனால் உடல் எடையாது அதிகரிக்குமே ஒழிய குறையாது.
ஆனால் நிறைய பிஸ்கட்டுகளில் டிரான்ஸ் ஃபேட் (trans fat) ஜீரோ என்று எழுதப்பட்டிருக்கும். அதற்கான சாத்தியமே கிடையாது. நிச்சயமாக டிரான்ஸ் ஃபேட் (trans fat) எல்லா பிஸ்கட்டுகளிலும் இருக்கும்.
குறைந்த கலோரி
குறைந்த கலோரிகள் (லோ இன் கலோரிஸ்) என்று பல பிஸ்கட்டுகளிலும் எழுதப்பட்டிருக்கும். ஒரு க்ரீம் பிஸ்கட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அதில் குறைந்தபட்சம் 40 கலோரியாவது இருக்கத்தான் செய்கிறது.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
பிஸ்கட் செய்யும் மிக முக்கியமான வேலையே பசியை அடக்கி வைத்திருப்பது தான். குறைந்தபட்சம் மூனறு அல்லது நான்கு பிஸ்கட் சாப்பிட்டாலே குழந்தைக்கு பசி அடங்கிவிடும். அதற்குப் பிறகு குழந்தையால் வேறு எதுவும் சாப்பிடமுடியாது. அதனால் குழந்தைக்கு பிஸ்கட் கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்.
எனக்கு இனி அந்த அவசியம் இல்லை.. இந்தியன் 2 பற்றி கமல் அதிரடி பதில்
January 04, 2019அரசியலில் நுழைந்தபிறகும் தற்போது கமல் இந்தியன்2 என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எதாவது அரசியல் கருத்துகள் இருக்குமா என அனைவரும் பேசி ...
அதற்கு பதில் அளித்த அவர் "நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் கருத்து கூறவேண்டும் என அவசியமில்லை. வெளியில் வந்தும் சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் 2 படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது
படத்தின் ட்ரைலரை காணவில்லை: நடிகர் புகார்
January 03, 2019என் கிணத்தை காணல என வடிவேலு புகார் கொடுத்து ஒரு படத்தில் காமெடி செய்தது போல ஒரு நடிகர் படத்தின் ட்ரைலரை youtubeல் காணவில்லை என புகார் க...
சமீபத்தில் தி அச்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வரலாற்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
பெரிய சர்ச்சை ஏற்படுத்திய இந்த ட்ரைலர் தற்போது காணவில்லை என அந்த படத்தில் நடித்த அனுபம் கேர் புகார் கூறியுள்ளார். youtube இணையத்தளத்தில் The Accidental Prime Minister என தேடினால் 50வது இடத்தில் கூட வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ட்ரெண்டிங்கில் இருந்த ட்ரைலர் எப்படி அடுத்த நாளே காணாமல் போய்விட்டது என அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு? எல்லோருக்கும் தெரியப்போகுது..
January 02, 2019முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர...
சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர், உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், உட்பட ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளன.
போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உட்பட ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடி இருக்கும். ஆனால் தனது சொத்துக்களை யார் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விபரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமலாக்க இயக்குனரகம், தமிழக அரசு ஆகியவையும், ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற உள்ளதால் தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவையும் ஜெயலலிதாவின் சொத்து குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது, விரைவில் மாநில மக்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. வாட்டர் பாட்டிலை ஓபன் செய்து தண்ணீர் குடிக்கும் கரடி
January 02, 2019ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி ...
நம்ம ஊரில் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில் காலம். கொடுமையான வெயில் அந்நாட்டில் நிலவி வருகிறது. காட்டு தீ ஏற்படும் அளவுக்கு வெப்பம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கிறது.
இதில் மனிதர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால் விலங்குகளும் படு அவஸ்தை பட்டு வருகின்றன. அப்படித்தான் கோலா கரடிகளும் வாடி, வதங்கி வருகின்றன.
சாதுவானது
கோலா கரடியானது மற்ற கரடி போல கிடையாது. ரொம்ப சாஃப்ட்... குழந்தை போன்ற சாதுவானது. இதை பார்த்தால் யாருமே பயப்பட மாட்டார்கள், பயப்படவும் தோணாது. ஆனால் இது ஆஸ்திரேலியாவில் தான் இருக்கும். வேறு எங்கும் அவ்வளவாக காணப்படாது.
தாகத்தில் கரடி
அப்படி ஒரு கோலா கரடி ரோட்டோரம் சுற்றி வருகிறது. எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று இங்குமங்கும் தேடி வருகிறது அந்த கரடி. கரடியின் தாகத்தை காரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் கவனிக்கிறார். பிறகு வண்டியை நிறுத்திவிட்டு கரடியிடம் செல்கிறார்.
வாட்டர் பாட்டில்
ஆனால் தன்னை நோக்கிதான் பெண் வருகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த கோலோ கரடி விருட்டென மரத்து மேல ஏறி உட்கார்ந்து கொண்டது. நல்ல வேளை, உச்சிக்கு போகவில்லை. பாதி மரத்தினை பிடித்து கரடி தொங்கி கொண்டிருந்தது. அந்த பெண்ணோ கையில் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு போய் கரடியின் அருகே நிற்கிறார்.
வாய் வைத்து குடிக்கிறது
பிறகு தண்ணீரை கரடியின் வாயில் ஊற்றுகிறார். கரடியும் பாட்டிலில் இருந்த மொத்த தண்ணியையும் வாய் வைத்து குடித்து முடிக்கிறது. பிறகு திரும்பவும் மரத்தில் ஏறிக் கொள்கிறது. கரடிக்கு தண்ணி கொடுக்கும் காட்சியை ஒருவர் காரிலிருந்தே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். கரடிக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா 2018ல் எத்தனை ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? ஆனால் லாபமா!
January 01, 2019தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 176 படங்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களில் சில படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் சர்கார், 2.0 ...
கடந்த வருடத்தில் சர்கார், 2.0 என பிரம்மாண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. பரியேறும்பெருமாள், 96, ராட்சசன் என சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெற்றது.
மொத்தம் இந்த வருடத்தில் ரூ. 2000 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருமானம் ரூ. 1700 கோடி தானாம். ரூ. 300 கோடி நஷ்டமாம்.
இந்த நஷ்டம் எல்லாம் சிறு பட தயாரிப்பாளர்களுக்குதானாம். பெரிய படங்கள் எதுவும் பெரியளவில் நஷ்டமடையவில்லை. அவர்களுக்கு சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, டப்பிங் உரிமை என்று எப்படியும் போட்ட பணத்தை நெருக்கி எடுத்துவிடுகிறார்களாம்.
இந்த தகவலை எல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய அனுபவம் உள்ள தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இவர் இதற்குமுன்பு தமிழ் சினிமா பற்றிய தகவலை தொகுத்து எழுதிய புத்தகத்திற்காக தேசியவிருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரூகாலர் வசதியை மேசேஜஸ் செயலியில் கொண்டு வந்தது கூகுள்.!
January 01, 2019கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இப்போது கூகுளின் மெசேஜஸ் செய...
என்ற குறுந்தவகல்களை கண்டறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ட்ரூகாலர் வசதியை மேசேஜஸ் செயலியில் கொண்டு வந்தது கூகுள்.!
குறிப்பாக இந்த புதிய அம்சம் மெசேஜஸ் செயலி பயன்படுத்தும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது
கூகுள் நிறுவனம்.
மெசேஜஸ்
பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில் புதிய அம்சம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.
செட்டிங்ஸ்
இப்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் நோட்டிபிகேஷன் வடிவில் உள்ளது, மேலும் புதிய ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் - அட்வான்ஸ்டு செட்டிங்ஸ்
-ஸ்பேம் ப்ரோடெக்ஷன் -எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும்.
குறுந்தகவல்
இந்த செட்டிங்ஸ்-ஐ செயல்படுத்தினால் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும். பின்பு இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்றால், முதலில் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின்
சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும், எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது.
தெளிவான விவரங்கள்
மேலும் ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)