திரைவிமர்சனம் - கொடிவீரன் பேமிலி ஆடியன்ஸ் மனதை வெல்கிறான்.
December 07, 2017சசிகுமார் மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவருக்கு நம்ப...
சசிகுமார் மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவருக்கு நம்பிக்கை தரும் வகையில் மீண்டும் தன் நண்பர் முத்தையாவுடன் இணைந்து கொடுத்துள்ள படம் தான் கொடி வீரன். சசிகுமாருக்கு வெற்றியை கொடுத்ததா? இந்த கொடி வீரன் பார்ப்போம்.கதைக்களம்
சசிகுமார் சிறு வயதிலேயே தன் தாயை இழக்கின்றார். அன்றிலிருந்து தன் தங்கையை அவர் தான் பார்த்துக்கொள்கின்றார். தன் தங்கைக்கு ஒன்று என்றால் ஊரே எதிர்த்து வந்தாலும் உண்டு, இல்லை என்று பார்த்துவிடுவார்.
அப்படியிருக்க அதே ஊரில் பசுபதி அவருடைய தங்கை கணவனுடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகின்றார். இதை அந்த ஊர் வருவாய் துறை அதிகாரி விதார்த் தட்டி கேட்கின்றார்.
விதார்த்திற்கும் சசிகுமார் தங்கைக்கும் திருமணம் நடக்க, பிறகு என்ன தன் மச்சான் பிரச்சனை இனி என் பிரச்சனை என சசிகுமார் இவர்களை காப்பாற்ற செய்யும் வேலையே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சசிகுமார் பிரம்மா, பலே வெள்ளையத்தேவா என பல ரூட்டில் சென்று நமக்கு இது தான் சரி என்று கிராமத்து வீரனாக களம் இறங்கிவிட்டார். தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். ஆனால், படம் முழுவதும் இவரை 10 பேர் 10 பன்ச் பேசி பில்டப் செய்துக்கொண்டே இருக்கின்றார்கள், அது தான் ஏன் என்று தெரியவில்லை.
பசுபதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிரட்டல் வில்லனாக கலக்கியுள்ளார். ஆனால், சமீபத்தில் வந்த கருப்பன் படத்தின் சாயல் மிகவும் அப்பட்டமாக தெரிகின்றது, ஏன் கதையிலேயே தெரிகின்றது. படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.
பசுபதி தன் தங்கை பூர்ணா மீது உயிராக இருக்கின்றார், சசிகுமார் தன் தங்கை சனுஷா மீது உயிராக இருக்கின்றார். இவர்கள் இருவரின் பாசத்தில் வென்றது யார் என்ற ஒன்லைனை மிகவும் ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்துள்ளார் முத்தையா? ஆனால், படத்தில் எதற்கு இத்தனை வெட்டுக்குத்து, அதிலும் பாடல் வரிகளில் எல்லாம் ‘உன் தலையை வெட்டி வைப்பேன்’ என்று படம் முழுவதும் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.
படத்தில் பெண்களுக்கான காட்சிகள் மிகவும் அழுத்தமாக உள்ளது, சனுஷா ரேணிகுண்டாவிற்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம், அதிலும் கிளைமேக்ஸில் பூர்ணாவிடம் சென்று சசிகுமாருக்காக பேசும் காட்சியில் கவர்கின்றார். பூர்ணாவிற்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், மிரட்டியுள்ளார்.
கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து பகுதிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார். ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி விதார்த்திற்கு என்ன ஆகும், சசிகுமார் காப்பற்றுவாரா என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது.
செண்டிமெண்ட் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
படம் முழுவதும் வரும் வன்முறை காட்சிகள், இன்னும் இதே கதைக்களத்தில் முத்தையா எத்தனை படம் தான் எடுப்பார் என கேட்க தோன்றுகின்றது.
மொத்தத்தில் கொடிவீரன் பேமிலி ஆடியன்ஸ் மனதை வெல்கிறான்.
சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்
December 07, 2017சொல்வதெல்லாம் உண்மை என்ற எபிசோட் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எலோராலும் அறியப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மூலம்...
இந்த நிகழ்ச்சியில் மூலம் பலர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது, ஏன் ஒருவர் கொலை செய்தது கூட தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த எபிசோர் 1500-வது எபிசோட் சமீபத்தில் வந்தது, இதனால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க, அவருடைய கணவரையே வரவைத்தனர்.
மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலாக அவரை விஜய் தொலைக்காட்சியில் கிண்டல் செய்த ராமரையே அழைத்து வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.
சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !
December 06, 2017ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என...
ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என்ற தலைப்பை கொண்ட படத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
இதே போல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இன்னொரு போஸ்டரில், தமிழ் திரையுலம் மூலம் தமிழ் நாட்டின் முதலமைச்சரான நபர்களின் பெயரை குறிப்பிட்டு, அந்த வரிசையில் இப்பட தலைப்பான ’12-12-1950′ யையும் குறிப்பிடப்பட்டது. இந்த போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெற தேவைப்படும் சர்ச்சைகள் ’12-12-1950′ படத்திற்கு நிறையவே கிடைத்துவருகிறது எனக்கூறலாம்.
” படத்தின் மைய்யக்கருத்தை மக்களிடம் கொண்டு பொய் சேர்க்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ‘பரோல்’ என்பது இப்பட கதையின் முக்கிய பங்காகும். ‘பரோல்’ என்ற விஷயம் நமது ஊரில் மிகவும் பேசப்படும் ஒரு தலைப்பாக தற்பொழுது மாறியுள்ளதால்தான் இந்த சர்ச்சையே. இது தற்செயலாக நடந்துள்ள விஷயமே தவிர திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் அல்ல. இப்படத்தை வெளியிடுவதற்கு விநியோகத்தார்கள்ளிடையே இருக்கும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகனும் ரசித்து கொண்டாடப்படும் படம் தான் ’12-12-1950′ ” என்றார் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் யாகூப் அலி.
வெரி ஸாரி விஜய் ஆண்டனி..! - அண்ணாதுரை விமர்சனம்
December 06, 2017காதலி இறந்துப்போனதால் குடிப்பழகத்திற்கு அடிமையாகி போன ஒருவனின் வாழ்க்கையும், அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் தடைமாறுகிறத...
காதலி இறந்துப்போனதால் குடிப்பழகத்திற்கு அடிமையாகி போன ஒருவனின் வாழ்க்கையும், அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் தடைமாறுகிறது என்பதுதான் `அண்ணாதுரை' படத்தின் ஒரு வரிக்கதை. இப்படி ஒரு கதையை மட்டும் எடுத்து, `இதுதான் படத்தின் ஒருவரிக்கதை' என சொல்ல எங்களுக்கும் ஆசைதான். என்ன செய்ய, இதேபோல் படத்துக்குள் பத்து-பதினைந்து கதைகள் இருக்கின்றன. ப்ச்ச்...அண்ணன் அண்ணாதுரை மற்றும் தம்பி தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி. `தாடி வைத்திருந்தால் அண்ணன், ஷேவ் பண்ணியிருந்தால் தம்பி' எனும் அதே பழைய ஃபார்மட்டில் வந்துபோகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் இடையே முகத்தில் உள்ள முடியைத் தவிர, வேறு எந்த வித்தியாசத்தையும் விஜய் அண்ணன் காட்டவில்லை. வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவற்றிலும் முந்தைய படங்களில் என்ன செய்தாரோ, அதையே செய்திருக்கிறார். எந்த வித்தியாசமும் காட்டவில்லை. படத்தின் நாயகிகளாக வரும் மூவரில் டயானாவும், ஜுவல் மேரியும் விஜய் ஆண்டனியின் மூத்த அக்காவை போலவும், மகிமா கடைசி தங்கையைப் போலவும் இருக்கின்றனர். நாயகிகளின் பாத்திரத்தைவிட, திரையிலேயே தோன்றாத `எஸ்தர்' கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது. டபுள் ஹீரோக்களுக்கு ட்ர்பிள் வில்லன்கள். ராதாராவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அவர் பெயரைவிட சிறியது. விஜய் ஆண்டனியின் அப்பாவாக நளினிகாந்த் நடித்திருக்கிறார். பயப்படவேண்டாம், அவர் பெயர் அப்பாதுரை இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பனாக காளிவெங்கட், தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
படத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் பத்து-பதினைந்து கதைகளையும் பிடித்து எசகுபிசகாக லின்க் அடித்ததில் எக்குதப்பாய் வந்திருக்கிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கேயோ செல்கிறது படம். திரைக்கதையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் எந்தவித அழுத்தமான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் அண்ணன் விஜய் ஆண்டனி, தம்பியைப் பற்றி ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என பல வயது மூத்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார். இருவரும் இரட்டையர்கள் என்று படத்தில் குறிப்பிடுவார்கள். ’இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, ’நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப் போயிருவேன், போனு தானே சொல்ற... போறேன்’ என வசனங்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரக்கும் வசனங்கள் ஒட்டவேயில்லை. வட்டிக்காரரிடம் கையொப்பம் போட்டுக்கொடுத்த வெற்றுப் பத்திரத்தை எப்படி மறப்பார்கள், அண்ணாதுரை எதற்காக சம்பந்தேமேயில்லாமல் தம்பிதுரையை போல் மாறுகிறார், ஜூவல் மேரி என்ன ஆனார் என ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
வீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். `ஈ.எம்.ஐ' பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஓ.கேதான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். அதேபோல், படத்தை இரண்டு மணி நேரங்களாக சுருக்கியதற்கும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடானக் கோடி நன்றிகள். குழப்பமான கதையும், அழுத்தமே இல்லாத திரைக்கதையும், ஸின்க் ஆகாத வசனங்களும் அண்ணாதுரையை மட்டுமல்ல, நம்மையும் படாதபாடு படுத்திவிடுகிறது.
வரலட்சுமியை அதிமுக வுக்கு இழுக்க முயற்சி? ஆபரேஷன் விஷால் ஆரம்பம்!
December 06, 2017எரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகைய...
விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களில் ஒரு பெண்மணி கிட்டதட்ட கடத்தப்பட்டு சிறை வைக்காத நிலைமைதான். எப்படியோ அடக்குமுறைகளை கையாண்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இப்போது அடுத்த ஸ்டெப் அரங்கேற தொடங்கியிருக்கிறது.
விஷாலை நோகடிக்க வேண்டும் என்றால், அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்படும் வரலட்சுமியை அதிமுக வுக்குள் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும். அதற்கான காய்கள் வெகு கச்சிதமாக நடத்தப்பட்டு வருகிறதாம். விஷாலை காதலித்து வந்தாலும், அப்பா சரத்குமாரிடம் மிகுந்த அன்பும் வைத்திருக்கிறார் வரலட்சுமி. இந்த அதிமுக தூதுவிடு படலம் அப்பாவுக்கும் தெரியும் என்கிறார்கள்.
வெட்டுப்புலி ஆட்டத்தில் வரலட்சுமி சிக்கிக் கொண்டால், அவுட் ஆகப் போகிறவர் விஷால்தான்.
குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதுல இப்படியொரு அற்ப சந்தோஷமா? முதல்ல ஆட்சிப்பணியை கவனிங்க ஐயா மாருங்களா….!
இளையதளபதியிடம் அசிங்கப்பட்டாரா ஜுலி!... நடந்தது என்ன?..
December 06, 2017இளையதளபதி நடிக்கும் படத்தில் ஜுலி நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வ...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பினை சம்பாதித்த ஜுலி விஜய் 62 படத்தில் நடக்கவிருப்பதாக படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.
சமீபத்தில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு காணொளியினை வெளியிட்டார். ஜுலி, ஆர்யாவிற்கு போன் செய்து அசிங்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
தற்போது விஜய்யுடன் நடிப்பதாக வெளியான தகவலை சாதகமாக்கிய ஜுலி, விஜய்க்கு போன் செய்ததாகவும், ஆனால் அவர் எந்தவொரு மரியாதை கொடுக்காமல் உடனே போனை வைத்துவிட்டார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், ஜுலி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
