நல்ல குடும்பத்தின் வெளிப்பாடுதான் நல்ல சமூகம்! ஆண் தேவதை அட்வைஸ்!
August 01, 2018ஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. ...
“வழக்கமான கமெர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்” என்கிறார் “ஆண் தேவதை” தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து. அவர் மேலும் கூறும்போது, “ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, அல்லது நல்ல சமூக கருத்துக்களை பேசும் படங்களில் பங்கு பெறுவது என சமுத்திரகனியின் முயற்சிகளை பார்த்து எப்போதும் வியப்புடன் இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் ‘நல்ல குடும்பத்தின் வெளிப்பாடு தான் நல்ல சமூகம்’ என்ற அவருடைய குறிக்கோளை நான் பாராட்டுகிறேன். வருங்கால தலைமுறை எவ்வாறு வளர வேண்டும் என அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் தான் இன்றைய முக்கிய தேவை. ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குனர் தாமிரா உருவாக்கிய நல்ல கருத்து, சமுத்திரகனியின் சிறப்பான நடிப்பால் கொண்டு சேர்க்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மேலும் அவர் சிகரம் சினிமாஸ், தயாரிப்பாளர் பக்ருதீனை முழு மனதுடன் பாராட்டுகிறார். “புகழ்பெற்ற இயக்குனரான கே.பாலசந்தர் சாரின் உருவப்படத்துடன் உள்ள ‘சிகரம்’ ஸ்டுடியோ, வலுவான ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட மிகச்சிறந்த மரியாதையை அவருக்கு தர முடியாது” என முடிக்கிறார் மாரிமுத்து.
ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ‘உணர்வுப்பூர்வமான’ இசையை வழங்குவதில் பிரபலமான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சென்னை நகர உரிமையை SPI சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது?
August 01, 2018நீரிழிவு நோய் என்பது நம்முடைய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் (இரத்தசர்க்கரை) அளவினைக் கட்டுப்படுத்த முடியாத நிலையையே குறிப்பதாகும். நம்முடைய...
நம்முடைய உடலில் சர்க்கரையை உறிஞ்சப்படுவதற்கான இன்சுலின் சுரப்பு முறையாக செயல்படாமல் இருத்தல், அல்லது இன்சுலின் உற்பத்தி போதுமானதாக இல்லாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் தான் நிகழ்கின்றன.
சர்க்கரை நோயாளிகள் செய்யகூடாதவை
சர்க்கரை நோயாளிகள் முதலில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடு தான். அதில் மிக கவனமாக இருந்தாலே போதும். மிக எளிமையாக நீரிழிவு நோயை விரட்டியடிக்க முடியும்.
அப்படி நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் செய்யவே கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு கடைபிடித்து வருவது மிக அவசியம்.
அதிக கொழுப்புள்ள உணவுகள்
சர்க்கரை நோய்யுள்ளவர்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கார்போஹெட்ரேட் தவிர்பது போலவே கொழுப்பு உணவுகளிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சாச்சுரேடட் ஃபெட், ஃபுல் ஃபெட் பால் பொருட்கள், கீரிம் கொண்ட சாஸ் வகைகள், சாக்லேட், வெண்ணெய், ஹம்பெர்க் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
எளிதில் கரையக்கூடிய சர்க்கரை மூலக்கூறுகள்
எளிதில் கரையக்கூடிய சர்க்கரை மூலக்கூறுகளான ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை சர்க்கரை நோயளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை குளிர்பானங்கள், இனிப்பு வகையான டெசர்ட்கள், பல பழங்களின் சாறுகள் மற்றும் இதர பானங்களில் உள்ளது.
பானங்களில் அதன் உள்ளடக்கத்தைப் படித்து தெரிந்த பின் அருந்தவும். காய் சாறுகள் மற்றும் சர்க்கரை இல்லா உணவுகள் நன்மையே தரும்.
வாழ்க்கை முறை
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் என்றாலும் கூட, அதி தீவிரமான உடற் பயிற்சியும் உங்களுடைய நிலைமையை மிக மோசமான மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் ரஜினியுடன் இணைந்தால் இது தான் நடக்கும்.! கமல்ஹாசன் பேட்டி
August 01, 2018சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்பட்ட கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தனித்தனியாக கட்சி துவங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். கமல் கட்...
அறிவிப்பு கூட வெளியிடவில்லை.
இந்நிலையில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள கமலிடம் " நீங்கள் ரஜினியோடு இணைந்தால் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் போல இருக்கும் என கூறப்படுகிறதே?" என கேட்டதற்கு , "நான் ரஜினியோடு கூட்டணி வைத்தால் எங்களை தோற்கடிப்பது முடியாத காரியமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
விஜய்க்காக முக்கிய அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாநிதி!
July 30, 2018கலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற ச...
விஜய்யின்வாழ்க்கையில் கலைஞரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. விஜய்யின் படங்களில் முக்கியமானது தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் அப்போது பெரும் அரசியல் சர்ச்சையை சந்தித்தது.
காரணம் படத்தில் இருந்த Time To Lead என்ற வசனம் தான். அந்நேரத்தில் படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. மேலும் படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி படம் வெளியானது.
படம் வெளியீடு குறித்து பேசுவதற்காக கொடநாடு வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க விஜய்யும், அவரின் அப்பாவும் சென்றார்களாம். ஆனால் பார்க்கமுடியாமல் போனதாம். ஆனால் படம் வெளியீடு பிரச்சனைக்கு தீர்வு கொடுத்ததற்காக ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியீட்டிருந்தார்.
அதே வேளையில் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி விஜய்க்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் அவர் தலைவா படம் தம்பி விஜய் நடித்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அரசை தாக்குவது போல வசனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் இது அரசியல் படம் அல்ல, யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும் விஜய்யின் அப்பா சந்திரசேகரும் அரசுக்கு ஆதரவாக பலமுறை செயல்பட்டவர். இந்த அரசுக்கு வேண்டியவர் என குறிப்பிட்டிருந்தார்.
கலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா? சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு!
July 30, 2018இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சே...
யாரோ, ஏதோ ஒரு படத்தில் பாடியதை இளையராஜாவே பிரத்யேகமாக போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்கள். அப்புறம் முட்டி மோதி அது அவரல்ல என்பதை தெரிந்து கொள்வதற்குள் அப்துல் கலாமின் அடுத்த நினைவு நாளே வந்துவிட்டது.
அதற்கப்புறம் ஜெயலலிதா இறந்த போது இலங்கை கவிஞர் அஸ்மின் எழுதி வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்து பாடிய பாடல் அப்படியே அச்சு அசலாக இளையராஜா பாட்டு போலவே இருந்தது. விடுவார்களா? அம்மாவுக்காக இளையராஜா போட்ட பாட்டு என்று சமூக வலைதளங்களில் பந்தி வைத்துவிட்டார்கள். இப்போதும் அது இளையராஜா பாடிய பாடலாகவே உலா வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது இளையராஜா இல்லங்க. நாங்கதான் உருவாக்குனோம் என்று விளக்கம் அளித்த பின்பும் அந்த விஷயம் பரவலாக போய் சேரவில்லை.
கட்… கலைஞர் மருத்துவமனையில் இருக்கிறார். விடுவார்களா? யாரோ ஒருவர் அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே மெட்டில் இளையராஜா குரலில் பாடுகிறார். அவ்வளவுதான்… இது இளையராஜா பாட்டு என்று புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். இசைஞானியும் கலைஞரும் நண்பர்கள் என்பதால், இது உண்மைதான் என்று எண்ணிய கூட்டம் புயல் வேகத்தில் அந்த பாடலை ஷேர் செய்து வருகிறது.
சிம்பிள் லாஜிக். அந்த பாடலை கூர்ந்து கேட்டால் தெரியும். அது இளையராஜா குரல் இல்லை என்று. அதுமட்டுமல்ல… கடல் போல இசையறிவு கொண்ட இளையராஜா தன் மனசுக்கு பிடித்த கலைஞர் கருணாநிதிக்கு பாடல் அமைக்கிறார் என்றால் ஏற்கனவே தானே போட்ட தன் மெட்டையா காப்பியடிப்பார்? இந்த அடிப்படை கூட தெரியாமல் பரப்பிவிடும் இவர்களை எந்த லிஸ்ட்டில் வைக்க?
ஜுங்கா திரை விமர்சனம் - வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.
July 30, 2018விஜய்சேதுபதி படம் என்றாலே தரமாக இருக்கும், கண்டிப்பாக எல்லோரும் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த முறை ஜுங்கா என்ற படத்தை நட...
கதைக்களம்
ஜுங்கா (விஜய் சேதுபதி) தாத்தா, அப்பா இருவருமே கேங்ஸ்டர்கள். தங்களை பெரிய தாதாவாக நினைத்து தங்களிடம் இருக்கும் பணம், சொத்து, தியேட்டர் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். கண்டக்டராக இருக்கும் விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தன் அப்பா, தாத்தா பற்றிய கதையை அறிகிறார். அவர்கள் இழந்த தியேட்டர் குறித்து அறிகிறார். உடனே அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஜுங்கா.
நடுவில் வரும் பிரச்சனைகளை சமாளித்து ஜுங்கா தன் அப்பா இழந்த தியேட்டரை மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
எல்லா படம் போல தனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்துள்ளார். அதோடு யோகி பாபுவின் கூட்டணியில் வரும் காட்சிகள் எல்லாம் அசத்தல், காமெடிக்கு பஞ்சமே இல்லை. சரண்யா-பாட்டி காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.
அந்த தியேட்டரை மீட்க காமெடி கேங்ஸ்டராக நிறைய விஷயங்கள் செய்கிறார். ஒரு சில பார்க்க ஏற்றதாக இருந்தாலும் சில விஷயங்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைக்கிறது, ஆனால் காமெடி கலந்து இருப்பதால் தவறாக தெரியவில்லை.
க்ளாப்ஸ்
விஜய் சேதுபதி கெட்டப். பாட்டி, யோகி பாபு காமெடி காட்சிகள்
வசனங்கள் மூலம் வைத்த காமெடி காட்சிகள் அசத்தல்.
பிரான்சில் இருக்கும் பாரிஸ் என்று கூறினால் சென்னையில் உள்ள பாரிஸில் போய் உட்காருவது என சின்ன சின்ன காமெடி காட்சிகளுக்கு தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி சொதப்பல்
கிளைமேக்ஸ் காட்சிகள் முன் பாடல்கள் வைத்தது
கதையின் கதைக்களம் அவ்வளவு ஆர்வமாக இல்லை.
டுவிஸ்ட் என்று எதுவும் இல்லை, வில்லன் வில்லனாக இல்லை.
மொத்தத்தில் சுமார் மூஞ்சி குமாரை எதிர்ப்பார்க்காமல் விஜய் சேதுபதி ரசிகராக வந்து படத்தை வேறொரு கோணத்திலிருக்கும் ஜுங்காவை ரசிக்கலாம்.