“அனைத்தையும் நாட்டுக்காக உதறி தள்ளிவிட்டேன்” - கண்கலங்கிய மோடி

கோவாவில் இரண்டு மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி, “கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்வு செய்தனர். என...

கோவாவில் இரண்டு மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி, “கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்வு செய்தனர். எனக்கான அனைத்தையும் நாட்டுக்காக உதறி தள்ளிவிட்டேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

கோவாவில் மோபா என்ற இடத்தில் க்ரீன் ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் (greenfield airport) மற்றும் டெம் என்ற இடத்தில் மின்னனு நகரும் (electronic city) உருவாக்க, இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய மோடி “அக்பர் தனது அமைச்சரவையில் ஒன்பது ரத்தினங்கள் உள்ளதாக குறிப்பிடுவார். அதே போன்று என்  அமைச்சரவையில் கோவாவில் இருந்து வந்த மனோகர் பாரிக்கர் உட்பட பல ரத்தினங்கள் இருப்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் என்னை தேர்வு செய்தனர். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது நம் கடமை. பல எம்.பி.,க்கள்  நகைகள் வாங்க பான் கார்டு கட்டாயம் வேண்டும் என்னும் விதி வேண்டாம் என என்னிடம் கூறியது அதிர்ச்சியளித்தது. மேலும் உயர் பதவியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து  வேடிக்கை பார்ப்பதில் விருப்பமில்லை. என் குடும்பம், வீடு என எனக்காக இருந்த அனைத்தையும் நாட்டுக்காக விட்டு வந்துள்ளேன்”, இவ்வாறு கண் கலங்கி பேசினார்.  

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About