கூகுள் வழங்கும் ஸ்பை வாய்ஸ் மெசெஞ்சர் டைப்பிலான கூகுள் டூப்ளக்ஸ்!!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நி...

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.. அதன் நவீன வடிவமாக இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவ மனைகளில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரும் வசதியை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சவுதி அரேபிய அரசு, சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடி மகளாக அறிவித்த. ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்தில் செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் நிக் கெர்ரிட்சென் என்ற செய்தி வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டுப்ளக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார்.

இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இந்த மென்பொருள் உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்மென்ட் பெற்றுக் கொடுக்கும். இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேசுகையில், உதாரணமாக செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் முடிவெட்ட அப்பாய்ன்ட்மெட் புக் செய்யச் சொல்லலாம். கூகுள் உங்களுக்காக போன் செய்து பேசும். இப்படி நமக்காக கூகுள் பேசிக்கொண்டிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப இந்த மென்பொருள் பதில் அளிக்கும். பதில் கேள்விகளையும் கேட்கும். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை,”அமெரிக்க தொழிற்துறைக்கு செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பின் கீழ் நாளை (மே 10ஆம் தேதி) நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட மூத்த அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தலைசிறந்த கல்வியாளர்கள், தொழிற்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களின் தலைவர்கள், அமெரிக்க வணிக தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்/

இந்த மாநாட்டை வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொழில்நுட்ப கொள்கைகளுக்கான துணை உதவியாளர் மைக்கேல் கிராட்சியோஸ் தலைமைதாங்கி நடத்தவுள்ளார்.இதில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழிலாளர்கள் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்கான ஒழுங்குமுறை தடைகள், அவற்றின் துறை சார்ந்த பயன்பாடுகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About