அப்பா வாழ்க்கையின் ரகசியங்களை மனம் திறந்த கலைஞர் மகள் செல்வி!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில...

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைஞர் மகளான செல்வி தந்தையை பற்றிய சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.

முதலில் எங்களை சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க சென்ற போது என் அண்ணனுக்கு ஸ்டாலின் என்ற பெயர் இருந்ததால் இடம் கொடுக்க மாட்டோம் என்றனர். அதனால் அப்பா அப்படி ஒரு பள்ளி தேவை இல்லை என்று சாதரணமான ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் எங்களிடம் பள்ளியை பற்றி எங்களிடம் எதுவும் கேட்கமாட்டார். ஆனால் எங்களுடன் சேர்ந்து விளையாட செய்வார். கேரம் போர்டு மிகவும் அருமையாக ஆடுவார்.

எனக்கு தெரிந்து அப்பா இதுவரை தியேட்டருக்கு சென்றதில்லை. preview ஷோவிற்கு தான் செல்வார். அப்படி செல்லும் போது எங்களையும் அழைத்து செல்வார்.

அப்பாவிற்கு நான் சாப்பாடு ஊட்டினால் மிகவும் பிடிக்கும். ஐந்து வருடம் நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி இருக்குறேன். மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.

அப்பாவிற்கு பிடித்த ஊர் என்றால் திருவாரூர், திருக்குவளை, அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பெரியார் பிறந்த ஈரோடு என்று கூறியுள்ளார்.

வீட்டில் உள்ள பூஜை அறையில் எந்த ஒரு சாமி புகைப்படமும் இருக்காது.

எங்கு வெளியில் போனாலும் அவரின் தாய் தந்தை படத்தை வணங்கி 100 ரூபாய் காசு வைத்துவிட்டு தான் போவார். ஆனால் இறுதியில் மருத்துவமனைக்கு செல்லும் போது அப்படி செய்யவில்லை என்று பல நெகிழ்ச்சியான தருணங்களை கலைஞரின் மகளான செல்வி கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About