அடடே! ஜெயலலிதா எப்படி கெத்தா பயன்படுத்துனாங்க- இதை வாங்க யாரும் ஆள் இல்லையே!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் கா...

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.

அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்தினார். இது 11 பேர் அமரக்கூடிய பெல் 412 EP வகையைச் சேர்ந்தது.

பிரச்சாரத்திற்கு பின் ஹெலிகாப்டர் பெரிதாக பயன்படுத்தப் படவில்லை. கடைசியாக 2018 டிசம்பர் மாதம் பெல் 412 EP ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏலம் விட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன் பொறுப்பு மாநில வணிக கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரின் அடிப்படை விலை ரூ.35 கோடி ஆகும். இதன் அடிப்படையில் ஏலம் விட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.

ஆனால் இதை ஏலத்தில் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர்.

இந்நிலையில் ஏலத் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About