ஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்...,
October 07, 2016ஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்..., ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரி...
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார். மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
அன்பு,
கருணை,
உடல்நலம்,
மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள், பெரிய கற்கள் போன்றவை.
வேலை,
வீடு,
கார் , போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
கேளிக்கை,
வீண்_அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ,
நல்லதையே செய்வோம் நல்லோராய்வாழ்வோம்.
றெக்க - நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது
October 07, 2016நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த ப...
நானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் ஹிட் அடிக்க, ரத்னம் சிவா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் லட்சுமி மேனன், ஹிட் பாடல்களை கொடுக்கும் டி.இமான் என பல ப்ளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்க விஜய் சேதுபதி உயர பறந்தாரா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் தான் இந்த றெக்க, படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது.
ஷாஜஹான் படத்தில் வரும் விஜய்யை போல் தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார், அதற்கேற்றார் போல் வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை கடத்திவர இவருக்கும் ஹரிஷ் உத்தமனிற்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது, ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனிடம் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள அதிலிருந்து, மீள முடியாமல் அவர் செய்ய சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கின்றார்.
பின்பு அவர் சொன்ன வேலையை விஜய் சேதுபதி செய்து முடித்தாரா ,எதற்காக அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார். லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, ஹரிஷ் உத்தமன் எதற்காக விஜய் சேதுபதியிடம் அந்த வேலையை கொடுத்தார் என்பதுதான் மீதிக் கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் சேதுபதி நம்ம பக்கத்து வீட்டு பையனாகவே நடித்து சலித்து போய் இந்த ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார் போல படம் முழுவதும் சண்டை காட்சிகள் தாக்கமே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக லட்சுமி மேனன் வீட்டிற்கு சென்று அவரை தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் சற்று சினிமா தனமாக இருக்கிறதே என்று யோசிக்க வைத்தாலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
லட்சுமி மேனன் வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் வில்லனிருக்கும் ஹீரோவிற்கும் பிரச்னையை உண்டாக்கும் கதாபாத்திரமாகத்தான் வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவை போல வெகுளித்தனமாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் கே.எஸ் .ரவிக்குமார், காமெடியன் சதிஷ், வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், கிஷோரை நாம் இதுவரை ஒரு மாஸான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த கிஷோர் இந்த படத்தில் ஒரு அப்பாவியாகவே ரசிக்கும் படி நடித்திருக்கிறார்.
இயக்குனர் ரத்தின சிவாவின் இரண்டாவது படம் இது, ஆனால் இதுதான் முதலில் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமான விஜய் சேதுபதியை இந்த படத்தில் சற்று வேறுப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர் ரத்தின சிவா
இமானின் இசையமமைப்பு பாடல்கள் அந்த அளவுக்கு சொல்லும் படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டை கட்சிகளின் பின்னணி இசை நன்றாக செய்துள்ளார், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பிரவின். கே. எல் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பும், சண்டை காட்சிகளில் வரும் பன்ச் டயலாக்குகளும் கை தட்டல்களை அள்ளுகிறது.
க்ளாப்ஸ்
சண்டை காட்சிகளில் வரும் இமானின் பின்னணி இசை
பல்ப்ஸ்
லாஜிக் அத்துமீறல், தெலுங்கு படங்களை மிஞ்சும் அளவிற்கு சண்டை காட்சிகள், இரண்டாம் பத்தி சற்று பொறுமையாக தொடங்குவது, லட்சுமி மேனனின் மேக்கப்
மொத்தத்தில் இந்த றெக்க வழக்கமாக பார்த்து கொண்டிருந்த விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு சற்று வேறுபடியாக ரசிக்க வைக்கும்.
தேவி -வழக்கமான பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுவதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
October 07, 2016பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிக...

தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கோலிவுட்டே பேய் பிடியில் இருந்து தற்போது மீண்டு வர, இயக்குனர் விஜய் பாலிவுட் வரை தற்போது இந்த பேய் ட்ரெண்டை எடுத்து கொண்டு சென்றுள்ளார், மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.
பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார். ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.
திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம் ஒரு சில மாற்றங்களை உணர்கிறார். என்ன என்று பார்த்தால் அவர் உடலில் ரூபி என்ற ஆவி புகுந்துள்ளது தெரிகிறது. ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறார்.
பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா, ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரே வார்த்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிங்க பிரபுதேவா சார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது. அதே எனர்ஜி இன்னும் அவர் டான்ஸ், காமெடி என கலக்குகிறார். அதிலும் தன் திருமணத்தை மறைக்க பிரபுதேவா செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கின்றது.
ஆனால், படத்தின் ரியல் ஹீரோ தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி மிரட்டியெடுத்துள்ளார். அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே சவால் தான்.
ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் கவர்கிறார். படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது.
க்ளாப்ஸ்
பிரபுதேவா, தமன்னாவின் நடிப்பு.
படத்தின் காமெடி காட்சிகள், அதிலும் தமன்னா உடலில் பேய் புகுந்தவுடன் செய்யும் அட்டகாசம்.
பல்ப்ஸ்
டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் தேவி வழக்கமான பேய் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுவதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
ரெமோ - திரைவிமர்சனம்
October 07, 2016ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார்....
ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். போஸ்டர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது இந்த ரெமோ.அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என நட்சத்திரக் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த ரெமோ சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றதா? பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் சினிமாவின் தொன்று தொட்டு வரும் கதைக்களம் தான், ஹீரோயினை ஹீரோ எப்படி காதலிக்க வைக்கின்றார் என்பதே ஒன் லைன். இதில் கொஞ்சம் அவ்வை சண்முகியை அடித்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயன் ரஜினி போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்ய, அந்த தருணத்தில் கீர்த்தி சுரேஷை பார்க்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு டாக்டர், ஒரு ஆடிஷன் முடிந்து சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வரும் போது இவரை உண்மையாகவே கீர்த்தி நர்ஸ் என்று நம்புகிறார்.
அதே நேரம் கீர்த்திக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் எப்படி கீர்த்தி மனதில் சிவகார்த்திகேயன் இடம்பிடிக்கின்றார் என்பதை செம்ம கலகலப்பாக கூறியுள்ள படம் தான் இந்த ரெமோ.
படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் ஒன் மேன் ஷோ என்றே கூறிவிடலாம். அதிலும் நர்ஸ் கெட்டப்பில் ஆண்களே ஜொல்லு விட்டாலும் ஆச்சரியம் இல்லை, குரல் கூட மாற்றி பேசியிருக்கிறார், ரசூல் பூக்குட்டிக்கு தான் இந்த பாராட்டு.
கீர்த்தியை காதலிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் செம்ம கலாட்டா. சிவகார்த்திகேயன் தனக்கு எது வரும் என்பதை மிகவும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். எத்தனை சீரியஸாக சென்றாலும் தன் ஒன் லைன் காமெடி மூலம் அதை ஈடுக்கட்டி சிரிக்க வைத்துள்ளார். ஆடல், பாடல், ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் கலக்கிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் இதுவரை வந்த படங்களிலேயே மிக அழகாக இருக்கின்றார். என்ன தமிழ் சினிமாவின் பாரம்பரிய ஹீரோ எது சொன்னாலும் நம்பி ஏமாறும் ஒரு கதாபாத்திரம் தான்.
யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் காமெடியில் கலக்கியுள்ளனர். அதிலும் யோகிபாபு நர்ஸ் சிவகார்த்திகேயனை துரத்தி துரத்தி காதலிக்கும் இடம் மற்றும் கிளைமேக்ஸில் நர்ஸை காணவில்லை என்று PK ஸ்டைலில் அலையும் இடமெல்லாம் செம்ம ரெஸ்பான்ஸ்.
அனிருத் பாடல்களை விட பின்னணி இசையில் மயக்குகிறார். PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படங்கள் பார்த்தது போல் உள்ளது. ஆனால், கொஞ்சமாவது லாஜிக் என்பதை பார்த்திருக்கலாம். இரவு 12 மணிக்கு வந்தால் கூட சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வருவதெல்லாம் ஓவர் சார். மேலும், இன்னும் ஆண்கள் நாங்க இப்படி, அப்படி என தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் வசனங்கள் வருவதை கொஞ்சம் மாற்றலாம்.
க்ளாப்ஸ்
சிவகார்த்திகேயன் முன்பே சொன்னது போல் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கிறார்.
யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் காமெடி கலாட்டா.
அனிருத்தின் இசை, மற்றும் PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு.
பல்ப்ஸ்
லாஜிக் அத்துமீறல், ஒரு மிடில்கிளாஸ் பையன் காதலுக்காக எப்படி இத்தனை செலவு செய்வான் என்று தெரியவில்லை. கதையில் முக்கியத்துவம் இல்லை, பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் இந்த ரெமோ விட்ட அம்பு சரியாக பாக்ஸ் ஆபிஸ் மீது பாய்ந்துள்ளது.
அதிமுகவில் அஜீத்? இந்த களேபரத்துக்கு நடுவுல இது வேறயா?
October 06, 2016அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல....
அவருக்கும் அதிமுக தலைமையான அம்மாவுக்கும் எப்போதும் மகன் அம்மா பாசம் உண்டு. அஜீத்தின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, அதை பார்மாலிடியாக கருதாமல் உள்ளன்போடு நின்றதை இப்போதும் புகைப்படங்களில் கண்டு மகிழும் அஜீத் பேன்ஸ் வட்டாரம். அதற்கேற்றது போல, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையிலேயே “மிரட்றாங்கய்யா…” என்ற அஜீத்தின் பேச்சு, வரலாற்றின் மிக மிக முக்கியமான தருணம். அப்போதே அவர் அம்மாவின் ஆள். அதனால்தான் அப்படி பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
அம்மாவுக்கு பிறகு அதிமுக வே அஜீத்துக்குதான் என்பது போல, கதை விட்ட பலரும் இப்போதும் இது நடந்து விடாதா என்று காத்திருக்கிற நேரத்தில்தான் அந்த பரபரப்பு கிளம்பிவிட்டது. கேரளாவிலிருந்து வெளிவரும் சில ஊடகங்களில் பரபரப்பான செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அஜீத்தை நேரில் பார்த்து பேச ஆசைப்பட்டதாக கூறுகிறது அந்த செய்தி. அவர்கள் சொல்வதை போல ஒரு வேளை அஜீத் மருத்துவமனைக்கு சென்று முதல்வரை பார்த்தால் என்னாகும்?
அதற்கப்புறம் அரசியல் வானத்தில் சூரியனை மறைத்துக் கொண்டு நட்சத்திரமும் மின்னப் பார்க்கும்!
மூக்கு குத்துவது..!
October 06, 2016மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது ...
கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.
இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

