கஜினிகாந்த் திரை விமர்சனம் -"கஜினிகாந்த்'- ஒடும் தியேட்டர்களுக்கு 'ரசிகர்கள் படையெடுப்பது எப்போது ? என்பதை பொறுத்திருந்து .,பார்க்கலாம் !
August 07, 2018கரு : ஞாபக மறதி ஹீரோவுக்கு நாயகி கூட திருமணம் ஆவதில் சிக் கல்... அதுவே இப்படக்கரு. கதை : தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரு...
கதை : தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரும் , அவரது கர்ப்பினி மனைவி உமா பத்மநாபனும் ரஜினியின் "தர்மத்தின் தலைவன் " படம் பார்க்க போனபோது பிறந்த குழந்தை தான் ஆர்யா .அதனால் அவருக்கு ரஜினிகாந்த் என பெயர் சூட்டுகிறார்கள். அவர் பிறந்தது "தர்மத்தின் தலைவன்" படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் என்பதாலோ என்னவோ ? அவரை ஞாபக மறதி நோய் வாட்டி வதைக்கிறது. அதனால் அவரது திருமணம் தட்டிதட்டிப் போக., அதனால் , அவரது ரஜினிகாந்த் எனும் பெயர் மருவி ., கஜினிகாந்த் என்றாகிறது.
இந்நிலையில் ,ஆர்யாவுக்கு சாயிஷாவை கண்டதும் காதல் பிறக்கிறது. ஆனால் ., சாயி ஷாவின் அப்பா சம்பத்தும் ., அப்பாவின் நண்பர்து போலீஸ் இன்ஸ்' மகனும் ஆர்யா-சாயிஷா காதலுக்கு தடையாக இருக்கின்றனர். இவர்களை விட பெரும் தடையாக இருக்கிறது ... ஆர்யாவின் ஞாபக மறதி நோய். அப்புறம் ? அப்புறமென்ன ...? தடை பல கடந்து .தன் ஞாபக மறதி நோயையும் மறந்து எப்புடி நாயகி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் ? என்பது தான்
"கஜினிகாந்த் "படத்தின் , கதையும் , களமும் .
காட்சிப் படுத்தல் : "இருட்டு அறையில் முரட்டு குத்து " , "ஹர ஹர மஹாதேவகி " உள்ளிட்ட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ,மேற்படி ,அது மாதிரி படங்களை வேறு பேனரில் தயாரித்த ' ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா- சாயிஷா நடிக்க வெளிவந்திருக்கும் "யு " சர்டிபிகேட் படமான "கஜினிகாந்த்." தின் கதையில் இருக்கும் "பெப்"
காட்சிப்படுத்தவில்துளியும் இல்லாதது குறை .
கதாநாயகர் :ஆர்யா., அசத்தல்ய்யா எனும் அளவிற்கு நடித்திருக்கிறார். மறதிக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் , யூத் ஐகானாகவும் பிய்த்து பெடலெடுத்து இருக்கிறார் ஆர்யா. ஆனால் , ஞாபக மறதி எனும் கதையை "பலே பலே மாஹோ டி " எனும் தெலுங்கு படத்தில் இருந்து அப்பட டைட்டிலுக்கு நன்றி கார்டு போடாமலேயே கதாசிரியர் மாருதி தாசரியிடம் கதையை வாங்கி ., அவரது பெயரை மட்டும் டைட்டில் கார்டில் போட்டதில் காட்டிய சாமர்த்தியத்தை இப்பட இயக்குனர்., காட்சிப்படுத்தல்களில்.... காட்டாததும் ,காமெடி எனும் பெயரில் கடித்திருப்பதும் பெரும் போரய்யா.
கதாநாயகி : சாயிஷாவும் சரியான சாய்ஸய்யா .... எனும் அளவிற்கு ஆர்யாவுடன் செம்ம நெருக்கம் , கிறக்கம் காட்டி ரசிகனை ஒரு மாதிரி திருப்திபடுத்துகிறார்.
காமெடியன்ஸ் : ஆர்யாவின் காமெடி நண்பர்களாக வரும் கருணாகரன் , சதீஷ் , "நான் கடவுள்"ராஜேந்திரன் மூவரும் 'யு' சர்டிபிகேட் படம் என்றாலும் இயக்குனரின் இரட்டைஅர்த்த வசனங்களுக்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்.
இரட்டை அர்த்த வசனங்களாவது பரவாயில்லை ...அந்த சதீஷின்.., "பாத்ரூம் போனனா .... ... தண்ணியா வந்துச் சு , தண்ணி வரலை டி ஷு பேப்பர் எடுத்துதொடைச்சுகிட்டு.." எனும் இயற்கை உபாதை கடி ... எல்லாம் கொடுமையோ கொடுமை.
.இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க ,
பிற நட்சத்திரங்கள் : சாயிஷாவின் அப்பாவாக சம்பத் , அண்ணி நீலிமாராணி, ஆர்யாவின் அப்பா "ஆடுகளம் " நரேன் , அம்மா உமா பத்மனாபன் , . , வயதான டெல்லி கணேஷ் சுலோட்சனா தம்பதிகள் , காளி வெங்கட் , மதுமிதா ,
ஹீரோவின் போலி அப்பா சிவசங்கர் மாஸ்டர், நண்பர் 'அம்மா'வெங்கட்.., ராகுல் தாத்தா.... உள்ளிட்ட அனைவரும் தங்கள் கேரக்டரை டைரக்டர் சொன்னபடி செய்திருக்கின்றனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் : பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பில் படம் கொஞ்சம் நீளம் ஜாஸ்தி. .பள்ளுவின் ஒவிய ஒளிப்பதிவும் பாடல்களும் ஓ.கே. பாலமுரளி பாலு இசையில், "ஓ பெண்ணே பெண்ணே நீயாரோ....", "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ..." , " ஹுல லாலா.. ஹூல லாலா ... ஹேய் மாமா ..." , ."ஸலீப் ஸ்லீப் ஸ்லீப்பிங் கெண்ட மீனப் போல ...சீம கருவமுள்ள ப்போல ... " உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஆறுதல். ஆனால் புதுமுக இன்ஸ்'பெக்டர் வில்லனுக்கு எல்லாம் மிரட்டும் ரீ ரெக்கார்டிங் ஜாஸ்திங்கோ.
பலம் : ஆர்யாவும் ., சாயி ஷாவும் தான் பலம். . "இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க" எனும் டபுள் மீனிங் டயலாக்கு களும் பெரும் பலம்.
பலவீனம் : நாயகரும் , நாயகியும் ஒரு .கோயிலுகுள் கட்டிப் பிடித்து முத்தம்.... கொடுப்பது உள்ளிட்ட காட்சிகளும் , இரட்டை அர்த்த வசனங்களும் பலவீனம்.
இயக்கம் : சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ., ஆங்காங்கே , "ரஜினி ரொம்ப நல்லவன்... எந்த வேலை கொடுத்தாலும் ரொம்ப நல்லா செய்வான் .சார் ", "குச்சு புடி நடனம் பற்றி., குச்சிய ,எப்படி புடிச்ச என்னடா அது ஒரு கலைதானா ?", "அந்த காலத்துல நான்
போடாததா ? . " என- ராகுல் தாத்தா கேரம் விளையாட்டில் கேட்கும் இடம் ., உள்ளிட்ட " "ஏ" ரக வசனங்கள் இயக்குனரின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்தி அவர் யார் ? என்கிறது. இது பல மா , பலவீனமா ..? இயக்குனருக்கே வெளிச்சம்!
தனக்கு பார்த்த ஒரு பெண்ணை அவள் திருமணத்திற்கு சம்மாதிக்காததால் பிராத்தல் கேஸில் போட அழைத்து வரும் காட்சியில் , போலீஸ் வாயிலாக ., தப்பு தண்டா செய்ய நினைக்கும் , போலீஸ்காரங்களுக்கே நம்ம இயக்குனர் ஐடியா கொடுப்பார் போலயே ... என நக்கலடிக்க வைக்கிறது!
ஆக மொத்தத்தில் ., இயக்குனரின்
முந்தைய "ஏ" சர்டிபிகேட் படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்., இந்த 'யு' சர்டிபிகேட் படம் இல்லாதது ....அவரை மீண்டும் 'ஏ' படங்களையே எடுக்கத் தூண்டும் அதை கே.ஈ.ஞானவேல்ராஜாவே யே ..தயாரிக்க தூண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
பைனல்" பன்ச் " : "கஜினிகாந்த்'- ஒடும் தியேட்டர்களுக்கு 'ரசிகர்கள் படையெடுப்பது எப்போது ? என்பதை பொறுத்திருந்து .,பார்க்கலாம் !
அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி
August 07, 2018அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி *அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்த...
*அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்துவர்கள்.*
*உண்மையில் அரிசிசாதம் சாப்பிட் டால் நோய்களை குணப்படுத் தவே செய்யும்*
*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களை தரும்!?*
*இதோ........*👇
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும் இதுவே. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூ சம்பா அரிசி* :
பக்க வாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச் சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங் குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக் குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப் பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்.
*அனைவரும் பலன் பெறும் வண்ணம் பகிருங்கள்*
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
August 06, 2018நடிப்பில் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் நடிகர் கமலஹாசன். அவர் செய்த சவாலான செயல்களை எல்லாம் தற்போது உள்ள நடிகர்கள் செய்ய தயங்கி கொண்டிருக்கும்...
அது எதுவென்றால், திருப்பரங்குன்றம் MLA ஏ.கே.போஸ் சில நாட்களுக்கு முன் இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதில் விஷால் போட்டியிட உள்ளாராம். தற்போது இதற்கான வேலைகளில் தான் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த தேர்தலில் தற்சமயம் கட்சி ஆரம்பித்துள்ள கமலே போட்டியிட தயங்கி வருகிறார். ஏனென்றால் இதில் எப்படியோ ஆளும் கட்சி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளதாம். அதனால் முதல் தேர்தலிலேயே தோற்றால் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என நினைக்கிறார், கமல்.
இதனால் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றே தெரிகிறது. ஆனால் விஷால் போட்டியிடுவது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் படம் - ‘படித்தவுடன் கிழித்துவிடவும்‘!
August 06, 2018‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படம் இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் உருவாகும் ஒரு ஹரார் படம். வடிவேலுவின் காமெடி வசனத்தை ஒரு படத்திற்கு தலைப்பா...
வடிவேலுவின் காமெடி வசனத்தை ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். அதுதான் “படித்தவுடன் கிழித்துவிடவும்“. இந்த படத்தை ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.உஷா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.எம்.டி.கருணாநிதி அறிமுகமாகிறார். இந்தப் படத்தை செ.ஹரிஉத்ரா இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
‘படித்தவுடன் கிழித்துவிடவும்‘ படம் பற்றி இயக்குனர் செ.ஹரிஉத்ரா கூறுகையில், “ஒரு அரசியல்வாதி இன்சூரன்ஸ் மோசடி செய்கிறார். அவரை இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி பழிவாங்குகின்றன என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்’’ என்றார்.
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ :--
August 06, 2018*பச்சை தேங்காயின் பயன்கள்* தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை.... பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்ப...
*பச்சை தேங்காயின் பயன்கள்*
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
இரத்தத்தை சுத்தமாக்கும்...
உடலை உரமாக்கும்.....
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ....
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்🤔?..
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...
அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்
August 06, 2018பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்து...
புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.
அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள்,
வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்
மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள் என்று
இறைத் தூதர் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
* தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க
அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
* இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
* உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
* மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது.
இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
குறிப்பு:அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.