ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
August 10, 2018அஜித் எப்போதும் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனிதர். ஆனால் அவரே ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளாராம். சந்தானம் அஜி...
சந்தானம் அஜித்தை வைத்து எடுத்த பேட்டியை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பேட்டியில் அஜித், எனக்கு வரலாறு படத்திற்காக விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.
பிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் வரலாறு படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. அந்த படத்திற்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது என்று பேசியுள்ளார்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
August 09, 2018சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை...
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் தனியா, என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
ஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி! எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?
August 09, 2018தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரும் 11540 நாட்கள் இருந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6...
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
குறுகிய காலங்களில் தமிழ்நாடு அப்துல்கலாம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற மூன்று பெரும் தலைவர்களை இழந்துள்ளது.
இந்நிலையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் கருணாநிதி தமிழக முதல்வராக 6863 நாட்களும், ஜெயலலிதா 4677 நாட்களும் இரண்டு பேரும் மொத்தமாக 11540 நாட்களாக முதல்வராக இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவை விட கருணாநிதி 2186 நாட்கள் அதிகமாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.
இருப்பினும் 80 ஆண்டுகள் அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள கருணாநிதி, 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்து உலகசாதனை படைத்தவர், இப்படி உலகில் எந்த தலைவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகித்ததில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஜெயலலிதா இறந்த 611 நாட்களில் கருணாநிதி இறந்துள்ளார்
காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கருணாநிதி? உண்மை இதுதான்
August 09, 2018திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர...
இந்த தகவல் உண்மையானது என்பது குறித்து அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் கூறியதாவது,
காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.
பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.
இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என கூறியுள்ளார்.
சுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் !
August 09, 2018பொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் ! அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை...
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை விரும்பிச் சாப்பிட,
படகெடுத்து🚣 சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.
அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும்🐟 மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன்🐠 பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.
மீனவர்கள்🎣 கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.
ப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !
இப்பொழுது மீனவர்கள்,🎣 ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !
ஆயினும்,
அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !
யோசித்த மீனவர்கள் 🎣 புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.
குட்டிச் சுறா மீன்🐬 ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள்🐡🐠🐟🦐🦑🦀 எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள்🦐🦀🐠🐟 முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.
வாழ்க்கையும் அப்படித்தான்...!!! வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே🏃🚴🤼⛹️🏋️ இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா🐬🐋🐳🦈 இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள்🐠🐡🐟🦀🦐🦑 சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட 🏃மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !!!!
சுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் !
சிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அம்மா! சாமீ… வேர் ஆர் யூ?
August 09, 2018நீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு...
டிஜிட்டல் இந்தியாவின் சுருட்டல் சூட்சுமத்தை போட்டு தாக்கிய படம் இரும்புத்திரை. விஷால் நடிப்பில் உருவான இப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமும் கூட. அப்படியெல்லாம் நாடு கொண்டாடிய படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் யார்? அவரது பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் அதிர்ச்சி மிஞ்சுகிறது. அண்மையில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, பி.எஸ்.மித்ரனின் அம்மா.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் அவர். பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல… நாடு முழுவதுமிருக்கிற கோவில்களை பராமரிக்கும் அதிகாரமும் இவருக்கு இருந்ததால், இன்னும் எங்கெல்லாம் என்னவெல்லாம் திருட்டு கொள்ளை போயிருக்கிறது என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது போலீஸ்.
அப்படியே வண்டியை டேர்ன் பண்ணி, மித்ரன் படம் இயக்கிய விஷயத்திலும் தன் கூரான பார்வையை போலீஸ் செலுத்தியிருக்கிறது என்பதுதான் திடுக் ஷாக். இந்த விஷயத்தில் நடிகர் விஷால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம். ஒருவேளை லட்சமோ, கோடியோ மித்ரன் அக்கவுன்டிலிருந்து விஷால் அக்கவுன்ட்டுக்கு கைமாறி இருந்தால், விஷால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் திரையுலகத்தில்.
பல வருடங்களாக கோவிலில் சும்மாவே இருக்கும் சாமிகள், இனிமேலும் சும்மாயிருந்தால் மட்டுமே இவர்களால் தப்பிக்க முடியும்.
சாமீ… வேர் ஆர் யூ?
