சிவகார்த்திகேயனுக்கு உண்மையில் என்ன நடந்தது - விளக்கம் தரும் தயாரிப்பாளர்

சமீபத்தில் ரெமோ நன்றி விழாவில் சிவகாத்திகேயன் மேடையிலேயே தன்னை வளர விடாமல் சில பேர் தடுக்கின்றனர் என்ற அழுது கொண்ட தெரிவித்தார். அவரது பேச்...

சமீபத்தில் ரெமோ நன்றி விழாவில் சிவகாத்திகேயன் மேடையிலேயே தன்னை வளர விடாமல் சில பேர் தடுக்கின்றனர் என்ற அழுது கொண்ட தெரிவித்தார். அவரது பேச்சு பெரும் அதிர்ச்சி கலந்த அனுதாபத்தை சம்பாதித்தது.

இந்நிலையில் உண்மையில் யார் சிவகார்த்திகேயனுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் பி. எல் தேன்னப்பன் பேசுகையில், "எனக்கும் அவர் அழுதது ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது, எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது மூன்று பேரிடம் புகார்கள் வந்துள்ளன. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன்.

இதில் ஞானவேல் ராஜாவிடம் மட்டும் சிவகார்த்திகேயன் கையளித்துட்ட அக்ரீமெண்ட் காப்பி உள்ளது, மேலும் அவரிடம் அட்வான்ஸ் வாங்கியது உண்மை தான் என்ற சிவா தரப்பு ஒப்புக்கொண்டது, மற்ற இரண்டு தயாரிப்பாளரிடமும் எந்த அக்ரீமெண்ட்டும் இல்லை. ஆனால் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம் என்கிறார்கள்.

விரைவில் இந்த மூன்று தயாரிப்பாளர்களும், சிவாவையும் ஒன்றாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாம். எந்த பிரச்சனையும் சுமுகமாக முடிப்பது தான் தயாரிப்பாளர் சங்கத்தின் குறிக்கோள் என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About