­
January 2017 - !...Payanam...!

பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண...

பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண்புள்ள மனிதர்களால் தீர்மானிக்கப் படுகிறது; அங்கே உதிரும் ஆழமான சொற்களால் கட்டமைக்கப்படுகிறது; அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் அன்பின் ஒளியால் அலங்கரிக்கப்படுகிறது. அத்தகைய பிரமாண்டம் பூசியிருந்தது, `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016' மேடை! தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர்கள் அலங்கரித்த விழாவை, தங்களுடைய வருகையால் மேலும் அழகாக்கினர் மூன்று கலைஞர்கள். நெருப்பாக வந்து நின்றார் ரஜினி... கனிவும் நிறைவுமாக நின்றார் கமல்ஹாசன்... நெகிழ்ந்துபோய் நின்றார் விஜய். `இன்னும் சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி அரங்கத்துக்கு வரப்போகிறார்!' என, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே பாலாஜி அறிவிக்க, பேரைக் கேட்டதற்கே அரங்கம் அதிர்ந்தது. `நெருப்புடா... நெருங்குடா பாப்போம்...' என்ற `கபாலி' பாடல், விழா அரங்கையே பரபரப்பாக்கியது. வாடிவாசலில் காத்திருக்கும் மாடுபிடி வீரர்களைப்போல அத்தனை பேரும் `பாட்ஷா'வின் வரவுக்காகக் காத்திருந்தனர்....

Read More

இந்தியாவிற்கு எப்போதும் ஒரு தீபாவளி தான். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்கள் வரும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்....

இந்தியாவிற்கு எப்போதும் ஒரு தீபாவளி தான். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்கள் வரும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். அப்படித்தான் இந்த பொங்கலுக்கு சரவெடியாய் பைரவா களம் இறங்கியுள்ளது. இளைய தளபதி ஏற்கனவே தெறி வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்க, அவர்கள் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க உடனே பைரவாவில் களம் இறங்கினார். அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பானதா? பார்ப்போம். கதைக்களம் இளைய தளபதி விஜய் சென்னையில் ஒரு வங்கியில் பணம் வசூல் செய்பவராக இருக்க, ஒரு பிரச்சனையில் அவருடைய உயர் அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு உதவுகிறார். கிட்டத்தட்ட அவரின் மகள் திருமணம் நடக்கவே விஜய் தான் காரணம். ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்திற்கு விஜய் செல்ல அங்கு கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் காதல். அவரிடம் காதலை சொல்லபோகும் நேரத்தில் தான் கீர்த்தியை சுற்றி பல பிரச்சனைகள் இருப்பது தெரிய வருகிறது. தன் காதலியின் பிரச்சனை தனக்கு வந்த...

Read More

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்ட...

<
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும்,  தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.  இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் பலஅரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறன். ஜல்லிக்கட்டு...

Read More

பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு அண்மையில் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த...

<
பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு அண்மையில் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக ஜீவிதா, பாலாவை சந்திக்க சென்றிருக்கிறார். இதுகுறித்து ஜீவிதா பேசும்போது, பாலா அவர்களிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவ்வளவு சந்தோஷம். நான் அவரை அலுவலகத்தில் சந்தித்த போது என்னால் நம்பவே முடியவில்லை. பின் என்னிடம் கதை பற்றி கூறனார், எனக்கு அதில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறினேன். அவரும் அதற்கு சரியான பதில்கள் கொடுத்தார். அவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினால் ஜீவிதா. ...

Read More

கமல்ஹாசன் காலில் அடிப்பட்டத்தை தொடர்ந்து சிறிகு ஓய்வுக்கு பிறகு இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அண்மையில் இவர் ஒரு ...

<
கமல்ஹாசன் காலில் அடிப்பட்டத்தை தொடர்ந்து சிறிகு ஓய்வுக்கு பிறகு இப்போது நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அண்மையில் இவர் ஒரு மாநாட்டில் கலந்திருக்கிறார். அதில் அவர் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் வரக்காரணமே மிஸ்டர் சிவாஜி கணேசன் தான். அவர் புகைப்பிடிக்கும் ஸ்டைலை பார்த்தாலே அழகாக இருக்கும். நாமும் புகைப்பிடிக்க வேண்டும் போல் இருக்கும் என்று கூறியுள்ளார். ...

Read More

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள...

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவரின் துணையின்றியே நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின்போது மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே“பிரசவ நேரத்தில் அனுமதிக்கப்படும் சொந்தங்களால், வலியால் துடிக்கும் பெண்ணுக்கு தொடர்ச்சியான நேரடி ஆதரவை வழங்க முடியும். குறிப்பாக, பெண்களை உடன் அனுமதிக்கும் போது, வசதியாக உணரச் செய்து, இயற்கையான முறையில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையை தவிர்த்து, குறைந்த செலவிலான இயற்கை...

Read More

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன...

இப்போதெல்லாம் டி.வி சானல்களில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. அடுத்த வாரம் வரப்போகும் ஷோவுக்கு இந்த வாரம் ப்ரோமோ ஒன்று ஒளிபரப்புவார்களே அடேயப்பா. சண்டை, மோதல், அழுகை, விலகிப்போவது என ஏதாவது சீரியஸ் ஆன சீன்களை ப்ரோமோவாக போட்டு பலரின் கவனத்தை திருப்பிவிடுவார்கள். ஆனால் அதில் சில உண்மையல்ல என அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சில மாதங்களுக்கும் முன் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த சிம்புவுக்கும், அதில் நடனமாடிய டிங்குவுக்கும் சண்டை வருவதுபோல காண்பிக்கபட்டு பின் அது உண்மையல்ல என சொல்லப்பட்டது. அதே நிகழ்ச்சியில் தற்போது நடக்கும் சீசனில் காமெடி நடிகராக இருந்த தாடி பாலாஜியும் அவரது மனைவியும் ரியல் ஜோடியாக நடனமாடுகிறார்கள். இதில் ஒரு எபிசோடில் தாடி பாலாஜி நான் என மனைவியை அடித்திருக்கிறேன், கடுமையாக திட்டியிருக்குகிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன் என கூறினார். அதற்கு...

Read More

21 வயதே ஆன இளைஞரிடமிருந்து ஓர் ஆச்சர்யமூட்டும் கச்சிதமான த்ரில்லர் சினிமா, ‘துருவங்கள் 16’. ’சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம...

21 வயதே ஆன இளைஞரிடமிருந்து ஓர் ஆச்சர்யமூட்டும் கச்சிதமான த்ரில்லர் சினிமா, ‘துருவங்கள் 16’. ’சின்னச் சின்ன தவறுகள்தானே என்று நினைத்து நாம் செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது’ என்பதுதான் ஒன்லைன். ஒரு கொலை, அதை நிகழ்த்திய குற்றவாளி யார் என்று புலனாய்வு செய்யும் கதையில் முன்னும் பின்னுமாகச் சில சம்பவங்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களும் பிணைக்கப்படுகின்றனர்.  பல சுவாரஸ்யமான திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை நாற்காலி நுனியில் அமரவைப்பதோடு, கதையின் முடிச்சு அவிழும்போது வாழ்க்கைக்கான நீதியையும் முன்வைக்கிறது ‘துருவங்கள் பதினாறு’. குறும்பட இயக்குநர்களிலிருந்து, தமிழுக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு அறிமுகஇயக்குநர் கார்த்திக் நரேன்.  ஒரு காட்சியைக்கூட பார்வையாளர்கள் தவறவிடாதபடி சம்பவங்களின் அடுக்கடுக்கான பிணைப்புகள், விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களைக் கையாண்டது ஆகியவற்றில் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். வாழ்த்துகள் கார்த்திக் நரேன்! கோவையில் நள்ளிரவில் கொலை ஒன்று நடக்கிறது. தற்கொலையாக பதியப்படும் இந்தக்கொலையை யார் செய்திருப்பார் என்பதைக் கண்டுபிடிக்கும் போலீஸ்...

Read More

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை ...

தமிழ்நாட்டில் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்?  . அப்படி இந்த ஜல்லிக்கட்டு தமிழ் மக்களை ஈர்த்ததற்கு காரணம் என்ன?   ஒருவர் களத்தில் மாட்டை வெற்றிகரமாக அடக்கி அதை வென்றுவிட்டால் ஆயிரம் மகுடம் தன் தலையில் ஏறுவதுபோல் நினைக்கும் வீரன். மற்றொருவர் வீரன் என்று எவரும் இல்லாமல் தன் காளை வென்றால் களத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முன்பு மீசையை முறுக்கிவிட்டு நடந்து செல்லும் மாட்டின் சொந்தக்காரர். ஜல்லிக்கட்டு என்றால் என்ன? மாட்டுப்பொங்கல் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான மாட்டுப் பொங்கலன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.  இதை ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களிட்டு அழைத்து வந்தனர் தமிழர்கள். குறிப்பிட்ட அந்த நாளில் 'வாடிவாசல்' என்று ஓர் இடத்தை அமைத்து வீரர்கள் விளையாட இடம் ஒதுக்கித் திருவிழா போல் கொண்டாடும் நாள்தான் ஜல்லிக்கட்டு. இதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். முன்பு இதை 'சல்லிக்கட்டு' என்று அழைத்து வந்தனர்...

Read More

பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என...

<
பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் புவன் R நுல்லன். சரி இது நிஜமாகவே பேய் கதையா, இல்லை எப்படிபட்ட கதை என பார்ப்போம். கதைக்களம் துணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள். ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார். கெட்ட சக்திகள் இருக்கும் கட்டிடத்தை மைம் கோபி வாங்க மாட்டார் என்பதை தெரிந்துக்...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்ட...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்டில் கொடுப்பார்கள் என காத்திருக்க, அவர்களுக்காகவே வந்துள்ளது இந்த துருவங்கள் பதினாறு. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை, ஒரு விபத்து நடக்கின்றது, இதை கண்டுப்பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார் ரகுமான். அதை தொடர்ந்து இந்த கொலைகளை யார் செய்தது, அந்த விபத்து எப்படி நடந்தது, இந்த கொலைக்கும், அந்த விபத்திற்கும் என்ன சம்மந்தம் என அடுத்தடுத்து பல டுவிஸ்டுகளுடன் படம் நகர்கின்றது. படத்தின் கதை இனி சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக இதோடு நிறுத்தியுள்ளோம். படத்தை பற்றிய அலசல் கிரைம் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே வருவது அரிது, பெரிதும் ஹாலிவுட், கொரீயன் படங்களில் தான் இதுப்போன்ற புலானய்வு கிரைம் படங்கள் வரும். கொரீயன் பட பாணியில் எந்த...

Read More

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்...

<
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்தைய படத்தை எடுத்த இயக்குனர் ராஜ பாண்டியுடன் இணைந்து விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாஸ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் அச்சமின்றி. கதைக்களம் படத்தின் தொடக்கத்தில் ஒரு நேர்மையான கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் பொது தேர்வின் கேள்வித்தாள்களை, தனியார் பள்ளிகளுக்கு விற்கும் ஒரு மோசடி கும்பலை பிடிக்க, பின் அந்த மோசடி கும்பலால் கொல்லப்படுகிறார். அதன்பின் பேருந்துகளில் Purseகளை திருடும் இளைஞனாக வரும் விஜய் வசந்த், ஸ்ருஷ்டி டாங்கேவை சந்திக்க இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். பின் அதே ஏரியாவில் போலீசாக இருக்கும் சமுத்திரக்கனியின் தோழியான வித்யா திருமணம் செய்து கொள்ளும் முன் இறந்துபோகிறார். ஒரு கட்டத்தில் விஜய் வசந்த்தையும், சமுத்திர கனியையும், ஸ்ருஷ்டி டாங்கேயையும்...

Read More

துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில...

<
துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் ரேவதி, ரோகிணி உள்ளிட்டோர்கள் கலந்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றி மாறன், "சிறிது நாட்களாக எனக்கு என்னுடைய வாழ்க்கை முறை மீது சில கேள்விகள் எழுகின்றன. எந்த மாதிரியான வாழ்க்கை முறையை நாம் கற்றுக் கொள்கிறோம், எகோ- ஃப்ரண்ட்லியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோமா, இருபது வருடங்களுக்கு முந்தைய மாதிரி இப்போது இருக்க முடியவில்லை, உடல் பருமன் உள்ளிட்ட உடல் நலன் சாராத பிரச்னைகள் கூட இன்று உடல் நலன் சார்ந்த பிரச்னைகளாக காண்பிக்கப்படுவது என்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நாம் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்று என்னால் உணர முடியவில்லை. அன்று ஆரோக்கியமான உணவை எனது பெற்றோர் எனக்கு ஊட்டினர்....

Read More

Search This Blog

Blog Archive

About