பிரபல நடிகையும், செய்திவாசிப்பாளருமான பாத்திமா கடத்தப்பட்டாரா? வைரலாகும் செய்தி

தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாச...

தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாசிப்பாளராகிவிட்டார்.

செய்தி சானல் பக்கம் போனால் அடிக்கடி இவரை காணலாம். இந்நிலையில் இவர் கடத்தப்பட்டதாக சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் எதிர்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் பேர் அடிபட்டது.

ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பாத்திமா தற்போது விளக்கம் அளித்தாராம். இதில் வதந்தி பரவிய அந்நேரத்தில் இவர் செய்தி வாசிப்பாளராக தூர்தர்ஷனில் இருந்திருக்கிறார்.

அங்கு சித்திரப்பா என தொடரில் நடித்து வந்தார். ஆனால் நிறுவனத்தின் கட்டளையின் படி இதை முடித்து செய்திக்கு செல்லுங்கள் என கூறிவிட்டார்களாம். இந்த சீரியல் 13 வாரங்கள் ஓடியிருக்கிறது.

அப்போது பாத்திமா செய்தி வாசிக்கவே வரவேயில்லையாம். நாடகம் முழுமையாக முடிந்த பிறகு தான் மீண்டும் செய்தி பக்கம் வந்தாராம். இதுதான் உண்மை. ஸ்டாலின் என்னை கடத்தவில்லை என கூறியிருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About