துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் கொடுக்க வேண்டும்- மேடையில் பொங்கிய பிரபலம்

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய து...

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் விஜய் விருது விழா மேடையில் பேசியுள்ளார்.

அதில் அவர், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும்.

பொது மக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று சரியாக குறிப்பார்த்து சுட்ட, உரிமைக்காக குரல் கொடுத்தவர்களை வாயிலேயே சுட்ட, வயித்துக்காக போராடியவர்களை வயிற்றிலேயே சுட்ட அந்த துப்பாக்கி சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும்.யாரை அழைத்து கொடுக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை மேடைக்கு அழைத்தே கொடுக்க வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.

பிறகு சமூக விரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை, சமூக விரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரி பெரிய மேடையில் நல்ல விஷயம் சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன் என்று பேசியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About