டிவி சேனல்களில் தமிழ் நடிகைகளுக்கு நடக்கும் அநியாயம்.. விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
June 21, 2019விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும...
இந்நிலையில் தற்போது அவர் ஒரு முக்கிய விஷயம் பற்றி கோபமாக பேசியுள்ளார். "பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களை வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள்"
"நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என சித்ரா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துளளார்.
ஆஹா, இது அதுல்ல.. பிகில் படத்தின் மொத்த கதையும் தெரிஞ்சி போச்சே!
June 21, 2019பிகில் திரைப்படத்தின் பர்ட்ஸ் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காவி வேட்டியுடன் கருவாட்டு சந்தையில் ஒரு விஜய் அமர்ந்திருப்பது போன்றும், கால்...
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் பிகில் என்றும், இன்றுதான் அறிவிக்கப்பட்டது.
பிகில் படத்தின், முதல் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. லுக்கை பார்த்தவர்களுக்கு பல படங்களின் சாயல் தெரிந்தது என்னவோ உண்மை.
காலா வேட்டி
உதாரணத்திற்கு, உட்கார்ந்திருக்கும் விஜய் அணிந்துள்ள காவி வேட்டி, சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் திரைப்படமான காலாவின் பர்ஸ்ட் லுக்கை போலவே காணப்பட்டது. இதில் இரு விஜய் காணப்படுவதையும், அதில் ஒருவர் தாதா போலவும், இன்னொருவர் விளையாட்டு பிள்ளை போலவும் காணப்படும் லுக்கை பார்த்தால், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்பட பாணியும் தென்பட்டது.
தேவர் மகன்
தேவர்மகன் திரைப்படத்தில், சிவாஜிகணேசன், ஊரில் பெரிய தலக்கட்டு. மற்றொரு பக்கம், அவரது சகோதரர் மகன் நாசர் பெரிய தலக்கட்டு. இப்படியாக இரு கோஷ்டிகளும் ரத்தம் சிந்த சிந்த வெட்டிக்கொள்வார்கள். ஆனால், சிவாஜி மகன் கமல்ஹாசன் கதாப்பாத்திரமோ, ஹாயாக ஹீரோயினுடன் சுற்றித் திரிந்து, தான் விரும்பியபடி வாழும் கேரக்டர். ஒருகட்டத்தில், சிவாஜி இருந்த இடத்துக்கே கமலும் வரக்கூடிய சூழ்நிலை எழும்.
பலே அட்லி
இப்போது பிகில் பட போஸ்டரை பார்த்தாலும், அதே கதைதானோ என்ற சந்தேகம் வருகிறது. ஹிட் படங்களை பாலீஷ் செய்து ஹிட் அடிப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் அட்லி. மவுனராகம்-ராஜா ராணி, சத்திரியன்-தெறி, அபூர்வசகோதரர்கள்-மெர்சல் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அட்லியை பற்றி சொல்வது யாவரும் அறிந்ததே.
நல்லா கொடுப்பாரு
இந்த நிலையில்தான், தேவர்மகன் போலவே, பிகில் படமும் உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது பர்ஸ்ட் லுக் போஸ்டர். எந்த படத்தோட 'இன்ஸ்ப்பிரேஷனாக' இருந்தாலும், அதை மறுபடியும், நல்ல ரைமிங்கோடு, டைமிங்கோடு படமாக்கி ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் வல்லவர் அட்லி. எனவே, வீ டோன்ட் கேர். விஜய் படம்னா கொண்டாடுவோம் என்ற மனநிலையில்தான் ரசிகர்கள் உள்ளனர்.
உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள்தான்!
June 21, 2019கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்...
லீக் ஆட்டங்கள் முடிந்ததும் அரை இறுதி ஆட்டங்கள். அடுத்து இறுதி ஆட்டம்.
இதுவரை இந்த 10 அணிகளும் ஆடிய ஆட்டங்கள், பெற்ற வெற்றி தோல்விகளை வைத்துப் பார்க்கும் போது, அரை இறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து இப்போதே ஓரளவு கணிக்க முடிகிறது.
இங்கிலாந்து: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலிருந்தே அனைத்துத் தரப்பினரின் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் அணி இங்கிலாந்து. பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நல்ல நேர்த்தி, ஒழுங்கை அந்த அணியில் பார்க்க முடிகிறது. நல்ல கிரிக்கெட்டுக்கு இரண்டும் மிக முக்கியம். அந்த வகையில் இங்கிலாந்து மிகச் சுலபமாக அரை இறுதியை எட்டிவிடும். அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 8 புள்ளிகள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோற்றது. இன்னும் இலங்கை, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த நான்கு ஆட்டங்களில் நிச்சயம் 2 அல்லது மூன்றில் ஜெயித்துவிடும் சூழல் என்பதால் அரை இறுதிக்கு இங்கிலாந்து நிச்சயம் வந்துவிடும்.
ஆஸ்திரேலியா: இப்போதைக்கு 10 புள்ளிகளுடன் டாப்பில் இருப்பது ஆஸ்திரேலியாதான். ஆடிய 6 ஆட்டங்களில் இந்தியாவிடம் மட்டும்தான் தோல்வி. மீதி ஆட்டங்களில் அட்டகாசமாக வென்றுள்ள அணி அது. இன்னும் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் மோத வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தியா: இதுவரை ஆடிய எந்த ஆட்டத்திலும் தோற்காத அணி இந்தியா. இந்த உலகக் கோப்பையில் அத்தனை அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாகத் திகழும் அணியாக உள்ளது. இதுவரை 4 ஆட்டங்கள்தான் ஆடியுள்ளது இந்தியா. அதில் மூன்றில் வெற்றி. ஒன்று மழை காரணமாக ரத்து. இன்னும், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த 5 ஆட்டங்களில் 3 அல்லது நான்கில் இந்தியா வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. எனவே அரை இறுதிக்குள் நுழைவதில் இந்தியாவுக்கு சிரமமிருக்காது.
நியூசிலாந்து அல்லது வங்காள தேசம்
உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எதுவாக இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. காரணம் நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியே காணாத அணியாக 9 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சிம்ம சொப்பனமாக உள்ளன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் வேண்டுமானால் அந்த அணிக்கு சாதகமாக அமையக்கூடும்.
அதேபோல எவ்வளவு பெரிய ஸ்கோரையும் சேஸ் செய்யும் அளவுக்கு தயாராக உள்ள வங்காள தேச அணியையும் புறக்கணிக்க முடியாது. அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவுடன் மோத வேண்டியுள்ளது. நியூசிலாந்து தனது அடுத்த நான்கு ஆட்டங்களிலும் தோற்று, வங்காள தேசம் தனது மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அணி அரை இறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
மற்ற 5 அணிகளும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலைதான் இப்போது.
முதல் அரை இறுதிப் போட்டி ஜூலை 09
இரண்டாம் அரை இறுதிப் போட்டி ஜூலை 11
இறுதிப் போட்டி ஜூலை 14
தமிழ் சினிமாவையே ஆண்ட விஜயகாந்திற்கு தற்போது இப்படி ஒரு மோசமான நிலைமையா! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
June 21, 2019தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள்...
விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பலரும் தேமுதிக நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். முதல் இரண்டு தேர்தல்களில் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற தேமுதிக, அதன்பிறகு படிப்படியாக சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.
இதற்கு விஜயகாந்த் வைத்த கூட்டணி, அவரது உடல்நிலை உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று, விஜயகாந்த் படிப்படியாக உடல் நலம் தேறி வருகிறார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இது அவரது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில் மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் உரிய காலத்திற்குள் அதனை செலுத்தி முடிக்கவில்லை. தற்போது ரூ.5.52 கோடி கடன் பாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை வசூலிக்க வங்கி அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, கடன் நிலுவை, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் வீடு மற்றும் கல்லூரியை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.
இதில் சாலி கிராமத்தில் உள்ள வீடு, மாமாண்டூரில் உள்ள கல்லூரி ஆகியவை அடங்கும். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி 4,38,956 சதுர அடி கொண்டது. இது ஸ்ரீ ஆண்டாள் அழகர் எஜிகேஷனல் டிரஸ்ட் என்னும் பெயரில் உள்ளது.
சாலி கிராமத்தில் உள்ள கதவு எண்.71 மற்றும் 72 ஆகிய கட்டடங்கள் முறையே 4,651 சதுர அடி மற்றும் 10,271 சதுர அடி கொண்டது. அப்பகுதியில் உள்ள காலி மனை எண்:53 ஆனது 3,031 சதுர அடி கொண்டது. இவை விஜயகாந்த் பெயரில் இருக்கின்றன. இவை வரும் ஜூலை 26ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.
ஏலம் தொடர்பான தகவல்கள் செய்தித் தாளில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட தேமுதிகவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒருகாலத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலையைக் கண்டு பலரும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...
June 20, 2019பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப...
இந்த இலைகள் ஒரு மெல்லிய மற்றும் அருமையான நறுமணத்தைக் கொண்டு சோம்பின் சுவையை ஒத்து இருக்கும். சாலட், சூப் போன்றவற்றில் மேலே இதனைத் தூவி உட்கொள்வதால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.
எக்சிமாவிற்கு இதமளிக்கிறது
வறண்ட மற்றும் எரிச்சலான சரும நிலையை எக்சிமா என்று கூறுவார். பெரும்பாலும் இதன் பாதிப்பால், சருமத்தில் வலி மற்றும் அரிப்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பாதிப்பு நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கும் தன்மைக் கொண்டது. இந்த வகை சரும பாதிப்பு உடலின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பாக, முகம், கழுத்து, கை முட்டி, மணிக்கட்டு, முழங்கால், மற்றும் கால் மணிக்கட்டு போன்ற இடங்களைத் தாக்கலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட செர்வில், சருமத்தில் எக்சிமா பாதிப்பால் உண்டான அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இந்த ,மூலிகையின் சாறு எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் தடவுவதால் அந்த இடம் நல்ல நிவாரணம் பெற முடிகிறது. செர்வில் இல்லை சாற்றுடன் க்ரீம் அல்லது லோஷன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
செரிமானத்திற்கு
பிரான்ஸ் நாட்டவர்கள், இந்த மூலிகையை தங்கள் உணவின் ஒரு முக்கிய பகுதியாக மாற்றிய பெருமையைக் கொண்டவர்கள். இந்த அருமையான வாசனை பொருந்திய இலைகள், செரிமானதிற்கு சிறந்த முறையில் உதவுவதாக பல ஆண்டுகளாக அவர்கள் நம்புகின்றனர். குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்ட செர்வில், ஒரு வழக்கமான மற்றும் ஆரோக்கியமான குடல் செயல்பாடுகளுக்கு சிறந்த முறையில் உதவுகிறது. மேலும் சிக்கலான குடல் இயக்கத்திற்கு சிறந்த பலன் அளிக்கிறது.
ஊட்டச்சத்துகளின் ஆதாரம்
இந்த மூலிகை காய வைத்துப் பயன்படுத்தப்படும்போது, கலோரிகள் குறைந்து காணப்படுகிறது மற்றும், கால்சியம், பொட்டாசியம், ஜின்க், மாங்கனீஸ், இரும்பு, மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்படும் இந்த இலைகளில் மேலே கூறிய ஊட்டச்சத்துகளுடன் வைடமின் பி 2 எனப்படும் ரிபோப்லேவின், நியாசின் - வைட்டமின் பி 3 , பைரிடாக்சின் - வைட்டமின் பி 4, மற்றும் தியாமின் - வைடமின் பி 1 என்ற ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது.
அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற அன்டி ஆக்சிடென்ட் இந்த மூலிகையில் அதிகம் உள்ளன, மேலும் செர்வில், லூத்தின் போன்ற பாலிபீனாலிக் ப்லேவனைடு அன்டி ஆக்சிடென்ட்களைத் தன்னிடம் கொண்டுள்ளது.
இது கண்பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு நன்மைத் தரும், மேலும் அல்சைமர் பாதிப்பைக் குறைக்கும் திறன் கொண்ட அபிஜெனின் போன்ற கூறுகளைத் தன்வசம் கொண்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம்
மாரடைப்பு, வாதம், மற்றும் இதர இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. இப்படி இரத்த அழுத்த நிலையை பராமரிக்க ஒரு பாரம்பரிய தீர்வாக செர்வில் அமைகிறது.
ஒரு கிருமிநாசினி
உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் அளிக்கும் அத்தியாவசிய எண்ணெய்களில் செர்வில் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு அத்தியாவசிய எண்ணெய். யுஜினால் , இதனை கிராம்பு எண்ணெய் என்றும் கூறுவர்.
பற்களுக்கான சிகிச்சைகளில் இந்த கிராம்பு எண்ணெய்யை பல் மருத்துவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் இந்த எண்ணெய்யில் உள்ள கிருமிநாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாகும். இதன் காரணமாக வலி எளிதில் குறைகிறது. சருமத்தில் உண்டான தடிப்பு, சிறு காயம் மற்றும் பூச்சிக் கடி போன்றவற்றை சரி செய்ய இந்த எண்ணெய்ப் பயன்படுகிறது.
மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது
மாதவிடாய் காலத்தை சௌகரியமாகக் கடந்து வர செர்வில் உதவுகிறது. மாதவிடாய் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றில் இந்த மூலிகை பாரம்பரியமாக பல காலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசௌகரியத்தை உண்டாக்கும் நீர் தேக்கம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பாதிப்புகளை செர்விலில் இருக்கும் நீர் பிரிப்புத் தன்மை எதிர்த்துப் போராடி ஒரு சௌகரியமான மாதவிடாய் காலத்தை வழங்குகிறது.
சளி நீக்க மருந்து
குளிர்காலங்களில் மற்றும் மழைக் காலங்களில் சளி பிடித்துக் கொள்வது ஒரு இயல்பான காரியமாகும். சளித் தொந்தரவு இருக்கும்போது, சோர்வு, மூக்கடைப்பு , தொண்டை வறட்சி போன்ற சில அறிகுறிகள் உண்டாகும். மேலும் இருமல் போன்ற காரணத்தினால் இரவு நேர உறக்கம் தடைபடும். செர்வில் ஒரு சிறந்த சளி நீக்க மருந்தாக செயல்புரிந்து, இருமல் மற்றும் சளி தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
தாய்ப்பால் மறக்கடிக்க நினைக்கும் தாய்மார்கள்
ஒரு குழந்தைக்கு தாய்பால் நிறுத்தப் பழகும் நேரத்தில், தாய்மார்கள் தங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். ஆகவே பாரம்பரிய மருத்துவர்கள் இவற்றிற்கான மூலிகைகளைப் பரிந்துரைக்கும்போது செர்விலையும் இணைத்துக் கொள்கின்றனர் . இதனால் இயற்கையான முறையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தாய்பால் சுரப்பு குறைந்து பால் கட்டு தடுக்கப்பட்டு இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைக்கப்படுகிறது.
முகத்திற்கான சிகிச்சை
பிரெஷ் செர்வில் இலைகளைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும். பல்வேறு சக்திமிக்க வைட்டமின் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த செர்வில், சருமத்தில் ஏற்படும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைத்து, புதிய சரும அணுக்கள் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
June 20, 2019மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வர...
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் செலவீணங்களைக் குறைக்கவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
அந்தவகையில், மின் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூட்ஸ் மற்றும் சேவை வரியாக தற்போது 12 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய உதவும் கலன்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 18 சதவீத ஜிஎஸ்டியையும் 12 சதவீதமாக குறைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், கூடிய விரைவில் மின் வாகனம் மற்றும் அதனைச் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பொருள் ஆகியவற்றின் வரி குறைப்பிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
சாதராணமாக, எலக்ட்ரிக் வாகனங்களின் மிக அதிகமாக இருப்பதாலும், அதனைச் சார்ஜ் செய்வதற்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாத காரணத்தாலும், மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?
இந்நிலையில், எலக்ட்ரிக் கார்களின் விலையுயர்வில் சிறியளவு பங்கினை வகிக்கும் வரியையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்து வரும் போரின், மறுபக்கமாக இந்த நடவடிக்கைப் பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், எதிர்காலத்தில் எலக்ட்ரிக்வாகனங்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் உயர்த்த இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது. தற்போது, நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும், மிக மிக குறைவான அளவிலேயே மின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் வகையில் அமையும்.
முன்னதாக இதேபோன்று, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, மின் வாகனங்களின் பதிவு இலவசம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களின் சுற்றுச்சூழலின் நண்பன் என்பதைக் குறிக்கும் விதமாக, அதற்கு பச்சை நிறத்திலான நம்பர் பிளேட்டைப் பொருத்தவும் உத்தரவிடப்பட்டது.
நாட்டை முழுமையாக மின் வாகனங்களின் ராஜ்ஜியமாக மாற்றும் முயற்சியை அரசு தற்போது மேற்கொண்டு வருகின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையிலாகவே, சமீபகலாமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும், முயற்சிகளும் அமைந்துள்ளன. அதேசமயம், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கும் முற்றுபுள்ளி வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.