
சினேகன் சார்… ஒரு பாடலுக்க ஆடணும். வர்றீங்களா? பொதுவா இந்த மாதிரி வேலைகளை ஹீரோயின்கள் செய்வார்கள். அல்லது இதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட குத்தாட்ட குமரிகள் செய்வார்கள். இதென்ன கொடுமை? சினேகனை அழைப்பது…
எஸ்.விஜயசேகரன் இயக்கும் எவனும் புத்தனில்லை படத்தில் ஒரு பாடலுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் இவர். நல்லவேளையோ, கெட்டவேளையோ… அழைப்பை மறுக்கவில்லை சினேகன். மலேசியா சென்னை ஆகிய இடங்களில் பிரமாண்ட செட்டுகளுக்கு நடுவேயும், சிலபல செட்டப்புகளுக்கு(?) நடுவேயும் இந்த பாடல் காட்சி படமாகியிருக்கிறது. கட்டிப்பிடி புகழ், சினேகன் சுமார் 200 அழகிகளை கட்டிப்பிடித்தபடி ஆடியிருக்கிறார்.
ஐயா… கவிஞரே. பார்த்து உஷாரா இருங்க. இல்லேன்னா ஆம்பள சிலுக்காக்கி ஆனந்த கூத்தாட விட்ரும் சினிமா!
0 comments