கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் இருக்கும் விசயங்கள் காப்பியடிக்கப்பட்டதா? வெளியான தகவல்

கமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர்...

கமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர் ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது.

கட்சி கொடியை ஏற்றிவைத்ததோடு மக்கள் நீதி மய்யம் என அவர் கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த கொடியில் 6 கைகள் இருந்தது. 3 சிவப்பு நிற கைகள், 3 வெள்ளை நிற கைகள் இருந்தது.

ஒன்றோடு ஒன்று இணைந்திருந்த அந்த கைகள் மும்பை தமிழ் பாசறையின் லோகோ போல இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் புகைப்படங்கள் சமூவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் சிலர் National Federation of Postal Employees அமைப்பின் சின்னம் என கூறிவருகின்றனர்.

அதில் மய்யம் என்ற மையம் என்ற சொல்லும் ஒன்று தான் என்கிறது தமிழ் இலக்கணமான ஐகாரக்குறுக்கம். அப்போதே இந்த சொல் தமிழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About