நகைச்சுவைக்கு பெயர் போன க்ரேஸி மோகன் நிஜத்தில் இப்படிப்பட்டவரா? பிரபலம் கூறிய தகவல்
June 11, 2019வசனங்களுக்கு, குறிப்பாக நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போனவர் கிரேஸி மோகன். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவ...
இந்நிலையில் இவரது படங்கள் பலவற்றில் நடித்துள்ள டெல்லி கணேஷ் இவரை பற்றி பேசுகையில், கிரேஸி மோகனின் வசனங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் நிஜத்தில் அவர் மிகவும் அமைதியான மனிதர். நகைச்சுவைக்காக வசனம் எழுதி வந்தார், திடீரென ஒருநாள் இலக்கியத்திற்காக எழுத ஆரம்பித்தார். நான், எப்படி வெண்பா பற்றியெல்லாம் எழுதுகிறாய்? என கேட்டதற்கு மேலே கையை காட்டி எல்லாம் அவன் செயல் என கூறினார்.
முதன்முதலில் தனது நண்பர்கள், சகோதர்களை எல்லாம் வைத்து சொந்தமாக கிரேஸி க்ரியேஷன் என்ற பெயரில் ஒரு நாடக ட்ரூப் ஆரம்பித்தார். அதிலிருந்து தான் அவரது பெயருடன் கிரேஸி என்ற பெயர் சேர்ந்து கொண்டது என புதிய தகவல்களை கூறினார், டெல்லி கணேஷ்.
பொண்டாட்டி ரிமோட் தரமாட்டா, நேரத்தை மாத்துங்க பிக் பாஸ்: வினோத கோரிக்கை
June 11, 2019பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வெளியான ஜிஃப் வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் பாஸ் தயவு செய்து மாத்துங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிக்...
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. கடந்த சீசன்களை போன்று இல்லாமல் இந்த சீசன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சீசன்கள் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பானது. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு ஏகப்பட்ட ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டுவார்கள். ஆனால் இம்முறை ஏன் ஒரேயொரு வீடியோவுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.
நடிகர் சங்க தேர்தல்: என் வேட்புமனு தள்ளுபடியா?- ரமேஷ் கண்ணா கொந்தளிப்பு
இந்நிலையில் கமல் ஹாஸன் வெவ்வேறு முகபாவனைகள் காட்டும் ஜிஃப் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களோ 8 மணி வேண்டாம் பழையபடி 9 மணிக்கே மாற்றிவிடுங்களேன் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்க ஊட்டு அம்மா அந்த நேரம் தான் ஒரு சீரியல் பார்ப்பார், அதனால் ரிமோட் கிடைக்காது பாஸ். எனவே, எங்களின் பரிதாப நிலையையும் புரிந்து கொண்டு பிக் பாஸ் 3 ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றுங்கள் என்று பாவப்பட்ட சில கணவன்மார்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜிஃப் வீடியோவை பார்த்த சிலரோ, ஆக இந்த சீசனில் கமல் ஹாஸனை கத்தி, கதறவிடப் போகிறீர்களா, அதை தான் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளீர்களா என்று கேட்டுள்ளனர். எப்படி போனாலும் மடக்கினால் பாவம் பிக் பாஸ் என்ன தான் செய்வார்?.
இந்நிலையில் சிலரோ மார்க்கெட் இல்லா பிரபலங்களுக்கே வாய்ப்பு கொடுக்கிறீர்களே, நிகழ்ச்சி பார்க்கும் எங்களுக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நிகழ்ச்சியை பார்க்க மட்டும் சாதாரண மக்களாகிய நாங்கள் வேண்டும், போட்டியாளர்களாக வேண்டாமா என்று சிலர் காட்டமாக கேட்டுள்ளனர்.
பிக் பாஸ் இது வெறும் ஷோ அல்ல நம் வாழ்க்கை என்று கமல் ஹாஸன் தெரிவித்ததை தான் ஜீரணிக்க முடியவில்லை. இது வெறும் ஷோ தான் வாழ்க்கை இல்லை என்பது தெரிந்தும் கமலையே மாத்தி பேச வைத்துவிட்டார்களே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
‘மடங்களின் பிடியில் இருக்கும் 40000 ஏக்கர் நிலங்கள்’… பா ரஞ்சித்தின் இந்தப் பேச்சுதான் இவர்களைப் பதற வைக்கிறதா?
June 11, 2019தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டிஎம் மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள...
தனது பேச்சில், “தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்ததும், புரையோடிக்கிடப்பதும் இந்த பகுதியில்தான். ஒருங்கிணைந்த இந்த தஞ்சை டெல்டா பகுதியில்தான். அதற்கு காரணம் நிலங்கள்தான்.
ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம். எத்தனையோ பேர் சொல்றாங்க ராஜராஜ சோழன் எங்க சாதி என்று. இங்குள்ள பறையர்கள் சிலர்கூட சொல்கிறார்கள் ராஜராஜ சோழன் எங்க சாதி என்று.
சத்தியமாக சொல்கிறேன் ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்கவே முடியாது. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான்.
சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான். 400 பெண்களை விலை மாதர்களாக மாற்றி மங்கலவிலாஸ் என வைத்துக் கொண்டு மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்தது ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான். 26 பெண்களை கோலார் தங்க வயலுக்கு விற்ற அயோக்கித்தன ஆட்சியும் ராஜராஜ சோழன் ஆட்சிகாலம்தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான். அதனால்தான் இருண்டகாலம் என்கிறோம்,” என்று பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
போலீசில் புகார்
ரஞ்சித்தின் இந்தப் பேச்சைக் கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். ரஞ்சித்தின் பேச்சு இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்,
வலையுலகம் முழுக்க இப்போது ரஞ்சித் – ராஜராஜன் சர்ச்சைதான் பிரதான பேசுபொருளாக உள்ளது. பெரும்பாலானோர், ராஜராஜன் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்கள், பொன்னியின் செல்வன் புதினம் போன்றவற்றை ஆதாரமாக வைத்துப் பேசி வருகின்றனர். தலித் ஆதரவாளர்கள் ரஞ்சித் பேசியதில் தவறே இல்லை என்று வாதிடுகின்றனர்.
ராஜராஜ சோழன் தங்கள் சாதிக்காரர் என்று வெள்ளாளர், வன்னியர், உடையார், அகமுடையார், முதலியார், தேவர் என 8க்கும் மேற்பட்ட சாதிக்காரர்கள் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜராஜ சோழன் ஆட்சி தான் இருண்ட ஆட்சி! – பா.ரஞ்சித் பேச்சால் ரணகளமான வலையுலகம்
June 11, 2019கும்பகோணம் அருகில் உள்ள திருப்பணந்தாள் கடை வீதியில் நீலப் புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவு நாளில் இயக்குநர் ரஞ்சித் பேசியது பெரும்...
“15 லட்சம் ஹெக்டேர் பாசன நிலங்களைக் கொண்ட டெல்டா பகுதியில் தலித்கள் மட்டுமல்ல, உழைக்கும் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏன் நிலமற்றவர்களாக ஆனார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. நில உச்ச வரம்புச் சட்டம் எல்லாரையும் கட்டுப்படுத்தியது. ஆனால் இங்குள்ள மடங்களை மட்டும் கட்டுப்படுத்தவில்லை. இங்குள்ள மடங்களிடம் மட்டுமே 40000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் யாருக்குப் பாத்தியதை? யார் பயன்படுத்துகிறார்கள்? நாம் ஏன் நிலமில்லாமல் போனோம்?
இங்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள தலித்துகளின் பிரச்சினையே நிலத்தின் அடிப்படையில்தான். நிலத்தின் அடிப்படையில்தான் இங்கு மிகப் பெரிய சுரண்டல்கள், தீண்டாமை நடந்துள்ளது. நிலத்தை இழந்தவர்கள் இங்கு உரிமையற்றவர்களாகிவிட்டார்கள்.
உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும், அனைவரும் தமிழராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் இங்கிருக்கும் மடங்களிலிருக்கும் நிலங்களை எங்களுக்குத் திருப்பித் தர முடியுமா? இந்த மடங்களின் வசமிருக்கும் 40 ஆயிரம் நிலங்களை எங்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? காரணம் நிலம்தான் இங்கு அனைத்துப் பிரச்சினைக்குமான காரணம். மற்ற மாநிலங்களில் நில உச்ச வரம்புச் சட்டத்துக்குள் அடங்கிய மடங்கள், தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அடங்கவில்லை.
இங்கிருக்கிற மடங்களின் நிலங்களை எங்களுக்கு எப்போது வாங்கித் தருவீர்கள்.. ஏன் என்றால் இது எங்களின் நிலம். எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவை. பல்வேறு காரணங்கள், முறைகளைச் சொல்லி பறிக்கப்பட்டவை. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும் நாங்கள் இன்னும் உங்களை நம்புகிறோம். உங்களைக் கைவிடாமல் இருக்கிறோம். இந்தத் தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது யாரால… தலித்களின் வாக்குகள் மிகக் கணிசமாக திமுகவுக்குத்தானே விழுந்தன. இன்னமும் உங்களைத்தானே நம்புகிறோம். தயவு செய்து எங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.”
இங்கிலீசு லவுசு Engleesu Lovesu Lyrics தனுஷ் பாடியுள்ள பாடல்
June 09, 2019தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்கா...
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜக் வார்ட்ரோபின், 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி படமாம்.
தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியானது. சமீபத்தில் பல நாடுகளில் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
இந்தநிலையில் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர்' படத்தை தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முதலில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் வெளியிடுவதாக இருந்தது. தற்போது, தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ஓராண்டுக்கு எந்தப்படத்தையும் வெளியிடாமல், தயாரிக்காமல் இருப்பது என முடிவெடுத்துள்ளார். இதன்காரணமாக 'ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ், இங்கிலீசு லவுசு என்றொரு மெலோடி பாடலை பாடியிருக்கிறார். மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியிருக்கிறார். தனுஷ் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக தனுஷின் பாடல்களுக்கு யு-டியூப்பில் நல்ல வரவேற்பு இருக்கும்
செவன் - திரைவிமர்சனம்
June 07, 2019நான் அவன் இல்லை பாணியில் தற்போது வந்துள்ளது செவன் படம். ஒரு ஆண், ஆறு பெண்கள் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் இந்த செவன் படம். கதை: ஐடி நிறுவ...
கதை:
ஐடி நிறுவனனத்தில் பணியாற்றிவரும் நந்திதா உடன் பணியாற்றும் ஹீரோ ஹவிஷை காதலிக்க துவங்குகிறார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். ஆனால் திடிரென ஹவிஷ் காணாமல் போகிறார். அதனால் நந்திதா போலீசில் புகார் கொடுக்கிறார்.
போலீஸ் அதிகாரி ரகுமானிடம் அவர் நடந்ததை கூறுகிறார். அப்போது தான் தெரிகிறது இதுபோல வேறு சில பெண்களும் ஹவிஷ் பற்றி புகார் கூறியுள்ளனர் என்று. தலைமறைவாக இருக்கும் ஹவிஷை போலீஸ் தேடி கண்டுபிடிக்கிறது.
ஆனால் தன் மீது புகார் கூறியுள்ள பெண்களை யாரென்றே தெரியாது என்கிறார் ஹவிஷ். இடையில் ஒரு கொலைப்பழியும் அவர் மீது விழுகிறது. பெண்களை ஏமாற்றியது யார்? கொலை செய்தது யார்? - கேள்விக்கு மீதிப்படம் பதில் சொல்கிறது.
க்ளாப்ஸ் மற்றும் பல்ப்ஸ் :
படத்தின் கதை சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தாலும் திரைக்கதையில் தெளிவு அதிகம் இல்லை. நான் அவன் இல்லை படம் போல ஆரம்பித்து பின்னர் கிரைம் த்ரில்லர் படமாக முடிகிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லாக வைத்திருந்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.
ஆனால் படத்தின் பல சீன்கள் லாஜிக் இல்லாமலும் நம்பமுடியாத அளவுக்கு தான் இருந்தன. ஒரு நபர் காணாமல் போனதாக இரு பெண்கள் அளித்த புகாரை தேசிய சேனல்களில் தலைப்பு செய்தியாகவும், இரண்டு நாலா காணாமல் போன ஒரு நபர் பற்றி ஊர் முழுக்க போலீஸ் போஸ்டர் ஓட்டி பரபரப்பாக தேடுவது போல காட்டுவதெல்லாம் நம்பும் அளவுக்கு இல்லை.
படத்தின் முதல் பாதி போர் அடித்தாலும், படத்தின் கடைசி அரை மணி நேரம் சற்று ஆறுதல்.
தெலுங்கு ஹீரோ அவிஷ் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். படத்தில் பல நடிகைகள் இருந்தாலும் ரெஜினாவுக்கு தான் பெரிய ரோல். மிரட்டியுள்ளார்.